தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கத்தோலிக இசைப்பள்ளியில் 547 சிறுவர்களிடம் பாலியல் வன்கொடுமை

ஜெர்மனியில் உள்ள கத்தோலிக இசைப் பள்ளி ஒன்றில் நடைபெற்ற விசாரணையில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக அங்கு பயிலும் மாணவர்கள் சுமார் 547 பேர் வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் புதன்கிழமை வெளி

News image
Updated On :19 ஜூலை 2017, 10:50 am

ஜெர்மனியில் பிரபல ரீகன்ஸ்பெர்க் டாம்ஸ்பாட்ஸன் என்கிற கத்தோலிக இசைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த இசைப்பள்ளியானது கடந்த 10-ம் நூற்றாண்டு முதல் செயல்படுகிறது. 

இங்கு கடந்த 1964 முதல் 1994 வரை ரெவ்.ஜார்ஜ் ராட்ஸிங்கர் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றினார். இவரது இளைய சகோதரர் ஜோஸப் ராட்ஸிங்கர் 2005 முதல் 2013 வரை போப் பென்டிக்ட்-ஆக இருந்தவர்.

இந்நிலையில், கடந்த 2010-ம் ஆண்டு இங்கு பயிலும் மாணவர்களுக்கு பாலியல் வன்கொடுமை அளிக்கப்படுவதாக முதன்முதலில் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், ஜோஸப் ராட்ஸிங்கர் முற்றிலும் மறுத்தார். 

இதையடுத்து உல்ரிச் வெப்பர் என்ற வழக்கறிஞர் இதுகுறித்து தனிநபர் விசாரணையில் இறங்கினார். இந்த வழக்கின் இறுதிகட்ட விசாரணை முடிந்து விவரங்கள் செவ்வாய்கிழமை வெளியிடப்பட்டது. 

அதில், கடந்த 1960-70 காலகட்டத்தில் சுமார் 9 முதல் 11 வயது வரை உள்ள மாணவர்களுக்கு பாலியல் வன்கொடுமை அளிக்கப்பட்டது தெரியவந்தது. இவர்கள் அனைவரும் இங்கேயே தங்கி இசைப் பயின்றவர்கள் ஆவர்.

அதுமட்டுமல்லாமல் இதுவரையில் அதாவது கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் சுமார் 547 மாணவர்கள் வரை இதில் பாதிக்கப்பட்டுளதாக தெரியவந்துள்ளது. 

இவர்கள் அனைவருக்கும் இந்த கத்தோலிக இசைப்பள்ளியின் மதபோதகர்கள், பாதிரியார்கள், ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் என 49 பேர் இக்குற்றச்செயலில் ஈடுபட்டு வன்கொடுமை அளித்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.