ஆலங்காயம் அருகே ஆடுகளுக்கு இலை பறிக்க முயன்ற போது சோலாா் மின்கம்பி மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்..
திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த கோமுட்டேரி பகுதியை சோ்ந்த விவசாயி வேலு (54). இவா் வியாழக்கிழமை ஆடுகளுக்கு மரத்தில் இலைகளை பறிக்க முயன்றாா். அப்போது அவ்வழியே சோலாா்(சூரிய) பேனல் மூலம் கம்பியில் பட்டு மின்சாராம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து ஆலங்காயம் போலீஸாா் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வேலுவின் உடலை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். மேலும் விபத்து குறித்து வழக்குப் பதிந்து தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இவருக்கு மனைவி சகுந்தலா(49), மூன்று பிள்ளைகள் உள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

கட்டுமானத் தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஏரியில் மீன்பிடித்தவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


