டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

இந்திய மருத்துவ மாணவர் வங்கதேசத்தில் குத்திக் கொலை!

வங்கதேசத்தின் சிட்டகாங்கில் செயல்பட்டு வரும் மருத்துவ தொழில்நுட்பக் கல்லூரியைச் சேர்ந்த இந்திய மாணவர் அதீஃப் ஷேக் என்பவர் வெள்ளிக்கிழமைஇரவு குத்திக் கொலை செய்யப்பட்டார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:26 pm

ANI

இதுகுறித்து டாக்கா காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்:

சிட்டகாங்கின் அப்துல் ஹமீது சாலையில் அமைந்துள்ள லேக்வியூ அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வரும் இந்திய மாணவர் ஒருவர் வெள்ளிக்கிழமை இரவு கூரிய பொருளால் கழுத்துப் பகுதியில் தாக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அவரை சிட்டகாங் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார். இதுகுறித்த விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அதே குடியிருப்பில் அதீஃப் உடன் மேலும் 3 இந்திய மாணவர்களும் தங்கியுள்ளனர். அவர்களும் சிட்டகாங் மருத்துவ தொழில்நுட்பக் கல்லூரியில் படித்து வருகின்றனர் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.