நியூயார்க்: அமெரிக்க விமான நிலையங்களில் தடுத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகதிகளை நாட்டுக்குள் அனுமதிப்பதற்கு முன்பு, அவர்களின் பேஸ்புக் பக்கங்களை அமெரிக்க எல்லை பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க அதிபராக கடந்த 20-ஆம் தேதி பொறுப்பேற்ற டொனால்டு டிரம்ப், சிரியா, ஈரான் உள்ளிட்ட ஏழு இஸ்லாமிய நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு பொதுமக்கள் வருகை தருவதற்கு விசா வழங்கப்பபடாது என்று தடை விதித்து உத்தரவிட்டார். தீவிரவாதிகளின் ஊடுருவலைத் தடுக்கவே இந்த நடவடிக்கை என்று கூறப்பட்டாலும், இந்த திடீர் உத்தரவு கடுமையான குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்த உத்தரவுக்கு எதிராக அமெரிக்காவின் மனித உரிமை அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் தொடுத்த வழக்கில், டிரம்ப்பின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து இரண்டு நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளது.
டிரம்ப் தடையின் கீழ் வரும் நாடுகளை சேர்ந்த ஆனால் அதேநேரம் அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேறுவதற்கு 'கிரீன் கார்ட்' பெற்றுள்ளவர்கள் கூட , தற்போது வெவேறு அமெரிக்க விமான நிலையங்களில் எல்லை பாதுகாப்பு துறை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக அமெரிக்காவில் இருந்து வெளிவரும் 'தி இண்டிபெண்டண்ட்' நாளிதழில் வெளியாகியுள்ள செய்தியில் அமெரிக்க விமான நிலையங்களில் தடுத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகதிகளை நாட்டுக்குள் அனுமதிப்பதற்கு முன்பு, அவர்களின் பேஸ்புக் பக்கங்களை அமெரிக்க எல்லை பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை செய்கின்றனர் என்றும், அவர்களதுஅரசியல் நிலைப்பாடு உள்ளிட்ட விஷயங்கள் சோதனை செய்யப்படுகின்றன என்றும், அதன் பிறகே அவர்களை அனுமதிப்பது குறித்து முடிவெடுக்கப்படுகிறது என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கபப்ட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்த ஆண்டின் மிக வெப்பமான நாள்! தில்லியில் 109.4 டிகிரி வெய்யில்!

ஜெயிலர் - 2 மெகா ஹிட் அடிக்கும்: யோகி பாபு
தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் தொடர்வது அரசியலமைப்பின் மீதான தாக்குதல்: காங்கிரஸ்

மாஸ்க் கொண்டாட்டம் பற்றி பேசிய சுழல்பந்து இரட்டையர்கள் அகீல் ஹொசைன், நூர் அகமது!
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை


