புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

மோசடி மின்னஞ்சல்களால் 22 கோடி ரூபாயை இழந்த விமான நிறுவனம்! 

நிதி பரிமாற்றம் தொடர்பாக அனுப்பப்பட்ட மோசடி மின்னஞ்சல்களால் ஜப்பான் விமான நிறுவனம் 22 கோடி ரூபாயை இழந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

News image
Updated On :21 டிசம்பர் 2017, 10:04 am

டோக்யோ: நிதி பரிமாற்றம் தொடர்பாக அனுப்பப்பட்ட மோசடி மின்னஞ்சல்களால் ஜப்பான் விமான நிறுவனம் 22 கோடி ரூபாயை இழந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இது தொடர்பாக ஏபி செய்தி தொலைக்காட்சியில் அந்நிறுவன செய்தித் தொடர்பாளர் தெரிவித்ததாவது:

ஜப்பான் நாட்டினைச் சேர்ந்த ‘ஜப்பான் ஏர்லைன்ஸ்’ விமான நிறுவனமானது, தனது பயன்பாட்டிற்காக போயிங் 777 ரக விமானம் ஒன்றை அமெரிக்க நிறுவனம் ஒன்றிடமிருந்து குத்தகைக்கு எடுத்து பயன்படுத்தி  வருகிறது. இதற்காக அந்நாட்டு நிதி நிறுவனம் ஒன்றுதான் பணப்பரிமாற்றம் முதலான ஏற்பாடுகளை கவனித்து வருகிறது. 

இந்நிலையில் விமான குத்தகைப் பணமாக 360 மில்லியன் யென் (இந்திய மதிப்பில் 20 கோடி ரூபாய்) செலுத்துமாறு அந்நிறுவனத்தில் இருந்து மின்னனஞ்சல் வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, அதில் குறிப்பிட்டிருந்த ஹாங்காங் நாட்டு வங்கிக் கணக்கில் கடந்த மாதம் 29-ஆம் தேதி பணம் செலுத்தப்பட்டது.

அதேபோல இந்நிறுவனத்தின் விமான சரக்குகளை அமெரிக்காவில் கையாளுவதற்கு என்று அந்நாட்டு நிறுவனம் ஒன்று வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ளது. அந்நிறுவனத்திலிருந்து கையாளும் கட்டணம் செலுத்துமாறு மின்னனஞ்சல் வந்ததனைத் தொடர்ந்து அந்நிறுவனத்திற்கும் ஆகஸ்ட் 27 மற்றும் செப்டம்பர் 7 ஆகிய இரு தினங்களில் 24 மில்லியன் யென் (இந்திய மதிப்பில் 2 கோடி ரூபாய்) செலுத்தப்பட்டது.

முதலில் ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம் தவறாக எதனையும் கண்டறிய இயலவில்லை. ஆனால் சில நாட்கள் கழித்து, குறிப்பிட்ட இரண்டு நிறுவனங்களிடம் இருந்தும் நிலுவைத் தொகையினை உடனே செலுத்துமாறு நினைவூட்டல் கடிதம் வந்த பிறகுதான், தங்கள் ஏமாற்றப்பட்ட விஷயம் தெரிய வந்துள்ளது.

பிறகுதான் குறிப்பிட்ட இரண்டு நிறுவனங்களின் விபரங்களைத்  திருடி 'சைபர் கிரிமினல்கள்' போலி மின்னஞ்சல்களை அனுப்பி பணத்தை திருடிய விஷயம் தெரிய வந்தது. அதேசமயம் குறிப்பிட்ட வங்கி கணக்கில் போடப்பட்ட தொகை உடனடியாக எடுக்கப்பட்டு விட்டது.   

தற்பொழுது ஹாங்காங் அரசினைத் தொடர்பு கொண்டு குறிப்பிட்ட வங்கி கணக்கினைப் பற்றிய விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அந்நிறுவன செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.