வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

பாகிஸ்தானில் ஏற்றப்பட்ட இந்திய தேசியக் கொடி 

இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு பாகிஸ்தான் மற்றும் ஜப்பானில் உள்ள இந்திய தூதரகங்களில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:40 pm

DIN

நாடு முழுவதும் இன்று 71-ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, புதுதில்லியில் உள்ள செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். இந்தியாவின் 14-ஆவது குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், தேசியக் கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.

இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் அம்மாநில முதல்வர்கள் தேசியக் கொடி ஏற்றி சுதந்திர தின நிகழ்ச்சிகளை பார்வையிட்டனர். 

இந்நிலையில், இந்தியாவின் 71-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. 

இந்தியத் தூதர் தேசியக் கொடி ஏற்றினார். அங்கு பணிபுரியும் இந்தியர்கள் அனைவரும் இதில் கலந்துகொண்டு இந்திய தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தினர்.

Story image

அதுபோலவே, ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவில் உள்ள இந்திய தூதரகத்திலும் 71-ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.