தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

மோசமான வானிலை: துபாயில் இருந்து ரஷ்யா வந்த விமானம் வெடித்து சிதறியது: 61 பேர் பலி (விடியோ இணைப்பு)

துபாயில் இருந்து ரஷ்யா வந்த விமானம், ரோஸ்டவ்-ஆன் நகரில் தரையிறங்கும் போது வெடித்து சிதறியது. இந்த விபத்தில் 61 பேர் பலியாகியுள்ளனர்.

News image
Updated On :19 மார்ச் 2016, 6:57 am

துபாயில் இருந்து ரஷ்யா வந்த விமானம், ரோஸ்டவ்-ஆன் நகரில் தரையிறங்கும் போது வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் 61 பேர் பலியாகியுள்ளனர்.

ரோஸ்டவ்-ஆன் நகரில் உள்ள டான் விமான நிலையத்தில் போயிங் 737-800 ரகத்தைச் சேர்ந்த ஜெட் விமானம், தரையிறங்கும் போது 50-100 மீட்டர் உயரத்தில் இருந்து விழுந்து நொறுங்கியுள்ளதாக பிளய் துபாய் இதனை உறுதி செய்துள்ளது.

விமான அட்டவணைப்படி விமானம் அதிகாலை 1.20-க்கு தரையிறக்க வேண்டும். ஆனால் 3.50-க்கு வெடித்துச் சிதறியுள்ளது. 6 விமான ஊழியர்கள், 55 பயணிகள் உள்பட  61 பேர் பலியாகியுள்ளனர்.

</p><p align="justify">முதல் முறையாகத் தரையிறங்க முயற்சித்தபோது, கடுமையான பனிமூட்டத்தால் ஓடுபாதை தெளிவாக தெரியவில்லை. எனவே, அந்த முயற்சி கைவிடப்பட்டது.  இரண்டாவது முறையாகத் தரையிறங்க முயற்சித்தபோதும் இதேநிலை நீடித்ததால், ஓடுபாதையைவிட்டு சுமார் 100 அடிதூரம் விலகித் தீ விபத்து ஏற்பட்டதாக தெற்கு மண்டல தலைமை அதிகாரி இகோர் ஓடர் தெரிவித்துள்ளார்.</p><p align="justify">விமானத்தில் பயணம் செய்தவர்களின் பெரும்பாலும் ரோஸ்டவ்-ஆன் பகுதிகளில் வசிப்பவர்கள். இதில், வெளிநாட்டைச் சேர்ந்த சிலரும் இருந்திருக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.</p><p align="justify">கடந்த வெள்ளிக்கிழமை ரோஸ்டவ்-ஆன் நகரில் பலத்த காற்று வீசி வந்த நிலையில், புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாகத் தெரிய வந்துள்ளது.</p><p align="justify">இதையடுத்து, விமான நிலையம் ஞாயிற்றுக்கிழமை வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.  இதனால்,  ஆறுக்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டு வந்தது. இதையடுத்து, மாஸ்கோவில் இருந்து வரும் விமானங்கள் கிராஸ்னோடர் விமான நிலையத்துக்கு  மாற்றி விடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.</p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.