டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

சவுதி அரேபியாவில் தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபட்ட 19 பேர் கைது

சவுதி அரேபியாவில் தற்கொலைப்படை தாக்குதலில் தொடர்புடைய 19 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:40 pm

IANS

ரியாத்: சவுதி அரேபியாவில் தற்கொலைப்படை தாக்குதலில் தொடர்புடைய 19 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் எதிரே தற்கொலைப்படை தீவிரவாதிகள் குண்டுகளை வெடிக்க செய்து தாக்குதல் நடத்தினர். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஜெட்டாவில் அமெரிக்க தூதரகத்தை குறிவைத்து தாக்குதல் நடத்திய பயங்கரவாதி பாகிஸ்தானை சேர்ந்தவர் என்று சவுதி அரேபியா அடையாளம் கண்டுபிடித்துள்ளது. மேலும், மொஹமத் மசூதி அருகே நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் காவலர்கள் 4 பேர் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து, 12 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் உள்பட 19 பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்துள்ளனர். முன்னதாக மதினாவில் தற்கொலை படை தாக்குதல் நடத்திய 26 வயது மதிக்கத்தக்க சவுதி அரேபியாவை சேர்ந்த ஒருவரையும் போலீசார் கைது செய்துள்ளதாக சவுதி உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.