திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

பாகிஸ்தானில் கிளர்ச்சியாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல்: 12 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

பாகிஸ்தானின் தெற்கு துறைமுக நகரமான கராச்சியில் கிளர்ச்சியாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே நடைபெற்ற மோதலில்....

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:36 pm

IANS

பாகிஸ்தானின் தெற்கு துறைமுக நகரமான கராச்சியில் கிளர்ச்சியாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 12 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த மோதலில் இரண்டு போலீசார் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இருவரின் உடல்நிலை தற்போது அபாய கட்டத்தை தாண்டியுள்ளதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கராச்சியில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தில் போலீசார் ரெய்டு நடத்தினர். அதில், 8 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 4 பேர் தப்பி ஒடியதாகவும் ஜின்குவா செய்திகள் தெரிவிக்கின்றன.

கொல்லப்பட்ட தீவிரவாதிகள் லஷ்கர்-இ-ஜாங்வி மற்றும் தெஹ்ரிக்-இ-தாலிபன் குழுவை சேர்ந்தவர்கள் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.