எஸ்.ஐ.ஆர். பணியில் ஆதார் இணைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்தெற்கு ரயில்வே மெத்தனமாக செயல்படாமல் பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்: கனிமொழிஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது - கனிமொழிஅதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

உய்குர் கூட்டமைப்புத் தலைவர் துல்குன் இசாவுக்கு வழங்கப்பட்ட இந்திய விசா ரத்து

சீனாவில் பயங்கரவாதி என்று குற்றம்சாட்டப்பட்ட சர்வதேச உய்குர் கூட்டமைப்புத் தலைவர் துல்குன் இசாவுக்கு இந்தியா வழங்கிய நுழைவு இசைவு (விசா) ரத்து செய்யப்பட்டது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:06 pm

PTI

சீனாவில் பயங்கரவாதி என்று குற்றம்சாட்டப்பட்ட சர்வதேச உய்குர் கூட்டமைப்புத் தலைவர் துல்குன் இசாவுக்கு இந்தியா வழங்கிய நுழைவு இசைவு (விசா) ரத்து செய்யப்பட்டது.

அண்மையில் பாகிஸ்தான் பயங்கரவாதி மசூத் அஸாருக்கு எதிராக ஐ.நா.வில் இந்தியா கொண்டு வந்த தீர்மானத்தை சீனா முறியடித்தது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் சீனாவால் பயங்கரவாதி என்று குற்றம்சாட்டப்படும் உய்குர் முஸ்லிம் தலைவருக்கு இந்தியா நுழைவு இசைவு வழங்கியது.

இதற்கு, சீனா கடும் கண்டனம் தெரிவித்ததாலும், இன்டர்போல் பட்டியலில், துல்குன் இசா தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருப்பதாலும், இந்தியா இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது.

தர்மசாலாவில் அடுத்த வாரம் சர்வதேச ஜனநாயக மாநாடு நடைபெறவுள்ளது. இதில் திபெத் பெளத்த மதத் தலைவர் தலாய் லாமாவும் பங்கேற்கவுள்ளார். ஜெர்மனியில் உள்ள துல்குன் இசா, இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக நுழைவு இசைவு வழங்கக் கோரி மத்திய அரசிடம் விண்ணப்பித்திருந்தார். இதனைப் பரிசீலித்த வெளியுறவு அமைச்சகம் அவர் இந்தியாவுக்கு வர கடந்த வாரம் அனுமதி அளித்தது.

சீனாவில் உய்குர் முஸ்லிம்களுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே அவ்வப்போது மோதல் ஏற்படுவது வழக்கம். சீனாவுக்கு எதிராக பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட உய்குர் மக்களை துல்குன் இசா தூண்டுவிடுவதாக அந்நாட்டு அரசு குற்றம்சாட்டி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.