நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

பாரீஸ் தாக்குதல்: முக்கிய குற்றவாளி கைது

கடந்த வாரம் பாரீஸ் நகரில் நடைபெற்ற தாக்குதல் தொடர்பாக பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த முக்கிய குற்றவாளியை போலீஸார் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:33 am

IANS

கடந்த வாரம் பாரீஸ் நகரில் நடைபெற்ற தாக்குதல் தொடர்பாக பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த முக்கிய குற்றவாளியை போலீஸார் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் கடந்த வாரம் ஐ.எஸ். தீவிரவாதிகள் மேற்கொண்ட பயங்கர தாக்குதலில் 129 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில் இத்தாக்குதல் தொடர்பாக பெல்ஜியத்தை சேர்ந்தவரும் பிரான்ஸ் குடியுரிமை பெற்றவருமான சாலா அப்திஸ்லாம் (29) என்பவரை பெல்ஜியம் சிறப்புப்படை போலீஸார் கைது செய்தனர்.

ப்ரஸல்ஸ் நகரின் ஒதுக்குப்புறமான ஒரு வீட்டில் பதுங்கியிருந்த அவர் மீது போலீஸார் கண்ணீர்புகை குண்டுவை வீசினர். பின்னர், மயங்கிய நிலையிலிருந்த அவரை கைது செய்தனர்.

பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டது தொடர்பான பல வழக்குகள், கைது செய்யப்பட்டுள்ள சாலா அப்திஸ்லாம் மீது உள்ளதாக போலீஸார் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.