திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

ஆப்கன் தலைநகரில் தற்கொலைபடை தாக்குதல்: 2 பேர் பலி, 7 பேர் காயம்

ஆப்கானிஸ்தான் தலைநகரில் உள்ள வெளிநாட்டு விருந்தினர் மாளிகையில் தலிபான் தற்கொலைபடையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 7 பேர் காயமடைந்தனர்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:47 am

IANS

ஆப்கானிஸ்தான் தலைநகரில் உள்ள வெளிநாட்டு விருந்தினர் மாளிகையில் தலிபான் தற்கொலைபடையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 7 பேர் காயமடைந்தனர்.

ஹாயிர்பூர் பகுதியில் உள்ள ஸ்பானிஷ் தூதரகத்தை சேர்ந்த விருந்தினர் மாளிகைக்கு வெளியே உள்ளூர் நேரப்படி (மாலை 5.40 மணிக்கு) பயங்கரவாதிகள் இந்த கார் குண்டுவெடிப்பை நிகழ்த்தியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து பல இடங்களில் துப்பாக்கிச்சூடு நிகழ்த்தியுள்ளதாக சின்குவா செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இந்த தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு அதிகாரி உள்பட 7 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த தாக்குதலுக்கு தலிபான் பயங்கரவாதிகள் குழு பொறுப்பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.