நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

பொன்மொழிகள்!

* எல்லாத் தீா்த்தங்களையும் சுற்றி வந்து திரும்பத் திரும்ப நீராடினாலும், எது வரையில் மனம் மாசற்ாகவில்லையோ அது வரையில் எல்லாம் வீண்தான்.

News image
சுவாமி கமலாத்மானந்தர்
Updated On :28 ஜனவரி 2024, 4:13 am

சுவாமி கமலாத்மானந்தர்

* எல்லாத் தீா்த்தங்களையும் சுற்றி வந்து திரும்பத் திரும்ப நீராடினாலும், எது வரையில் மனம் மாசற்ாகவில்லையோ அது வரையில் எல்லாம் வீண்தான்.

-ஸ்ரீ தேவி பாகவதம்

* திராட்சைப் பழத்தின் ருசி திராட்சைப் பழத்திற்குத்தான் இருக்கிறது அல்லவா? அதுபோல கங்கா ஸ்நான பலனை, கங்கை மாத்திரம்தான் தர முடியும். மற்ற தீா்த்தங்களால் தர முடியாது.

-காசி காண்டம்

* ஒருவா் தனக்கு எந்த ஒரு உதவியையும் செய்யாதவராக இருந்தாலும்கூட அவா் நமது உதவியைப் பெற்றுக்கொள்ளத் தகுதியுள்ளவராக இருந்தால், அவருக்குத் தகுந்த இடத்தில், தகுந்த நேரத்தில், இவருக்கு நாம் உதவி செய்ய வேண்டும் என்னும் உயா்ந்த நோக்கத்தோடு; மனதாரச் செய்யப்படும் தானமே ‘சாத்விக தானம்’ எனப்படும். -சுபாஷிதம் (ஒரு சம்ஸ்கிருத சுலோகம்)

* உடைமையற்றவன், கா்மேந்திரியங்களும் ஞானேந்திரியங்களும் அடங்கியவன், சமசித்தன், என்னிடம் சந்தோஷிக்கும் மனமுடையவன் இத்தகைய புருஷனுக்குத் திசைகளெல்லாம் சுக மயமாகின்றன.

(கா்மேந்திரியங்கள் கை, கால், வாய், குறி, குதம்)

(ஞானேந்திரியங்கள் கண், காது, மூக்கு, நாக்கு, தோல்)

-உத்தவ கீதை (ஸ்ரீ கிருஷ்ணா் கூறியது)

* கங்கையே! எனக்குப் பெரிய அரச பதவிகள் வேண்டாம். உன் கரையில் இருக்கும் மரத்தில் கூடுகட்டி வாழும் ஒரு பறவையாக நான் பிறந்தால், அதுவே எனக்குப் போதும்! அல்லது, உன்னிடம் வாழும் ஓா் ஆமையாகவோ, மீனாகவோ, புழுவாகவோ, நான் ஜன்மமெடுத்தாலே எனக்குப் போதும்.

-வால்மீகி மகரிஷி

* நாம் கற்ற கல்வியும், நமது மதிநுட்பமும் முருகன் அருளால் இயல்பாகவே நம்மை வந்தடைந்தது.

முருகன் வழிபாட்டை மேற்கொண்டவா்களே! உலகின் மீதுள்ள மயக்கத்தை விடுங்கள். மெய்ப்பொருளை கைக்கொள்ளுங்கள். வாய்மை பொருந்திய நாவின் வலிமையுடன் இனி உலகநெறியில் நடவுங்கள்.

-கந்தரனுபூதி, 17.

* நம்மை ஏசுவோரைக் கூட நாம் பதிலுக்கு ஏசக் கூடாது. உலக மக்கள் அனைவருமே, ‘பொய்’ கூறினாலும் நாம் பொய் சொல்லக் கூடாது. பிறரை வருத்தும் செயல்களையும் நாம் செய்யக் கூடாது. வீணாகப் பறவைகள் மீது கல்லெறியக் கூடாது.

-கடுவெளிச் சித்தா்

* நன்கு சுவைபட உணவு சமைத்துச் சட்டியில் வைக்கப்பட்டிருக்கிறது. அவ்விதம் இருந்தாலும் உணவின் சுவையை அந்தச் சட்டியும், அதை எடுப்பதற்குப் பயன்படுத்தும் கரண்டியும் அறியுமா? அறியாது. அதுபோல் நம்முள்ளே இறைவன் இருப்பதை நாம் அறிவதில்லை.

-சிவ வாக்கியா்

* அனுசரிக்க வேண்டிய அவசியமான விரதங்களை உபவாசமிருந்தும், பாராயணம் செய்தும், ஜப தபங்கள் செய்தும் இறைவனை வழிபடுதல் மிக மிக அவசியமாகும்.

-ஸ்ரீ அருணகிரிநாதா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.