பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

பொன்மொழிகள்!

பொறுத்துக் கொள்ளும் மன ஆற்றல் இல்லாதவன் எவ்வளவு பெரிய பண்டிதன், தபஸ்சி, அறிவாளியாக இருந்தால் என்ன? அவன் ஒருபோதும் பகவானின் கிருபைக்கு உரியவனாக ஆக முடியாது.

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:54 am

சுவாமி கமலாத்மானந்தர்

பொறுத்துக் கொள்ளும் மன ஆற்றல் இல்லாதவன் எவ்வளவு பெரிய பண்டிதன், தபஸ்சி, அறிவாளியாக இருந்தால் என்ன? அவன் ஒருபோதும் பகவானின் கிருபைக்கு உரியவனாக ஆக முடியாது.
-மகான்களுடைய சீரிய உபதேசம்

இந்த உலகில் பிறந்தவர்கள் அனைவரும் பெருகிய துன்பங்களைத்தான் 
அனுபவிக்கிறார்கள். இந்த உலகில் பிறவாத பாக்கியசாலிகளான முக்தி பெற்றவர்கள், பேரின்பத்தில் நிரந்தரமாக ஆழ்ந்திருக்கிறார்கள். 

முதலில் கூறிய பிறவியானது, உலகப்பற்றின் காரணமாக உயிர்களை வந்தடைகிறது.

பின்னர் கூறிய பிறவாத பெருநிலையோ, உலகப்பற்றுகளை விட்டவர்களால் மட்டுமே அடைய முடியும்.    
-மணிமேகலை (அறவணஅடிகள் கூறியது)

நல்வினை, தீவினை இவையிரண்டில் யார் எதைச் செய்தாலும் அவரவர் செய்த வினைகள் அவரை நாடிச் சென்றடையும்.
-குதம்பைச் சித்தர்

""ஓங்கார மந்திரமே வில், ஆன்மா அம்பு, இறைவனே இலக்கு'' என்று சொல்லப்படுகிறது. அம்பை எய்பவன் அலைபாயாத மனதினனாக இருக்க வேண்டும்; அம்பைப்போல் அந்த இலக்கு மயமாக ஆக வேண்டும்.
-முண்டக உபநிஷதம் -2.2.4

ஒருவர் செய்த உதவி தினை அளவே இருந்தாலும், சான்றோர்கள் அதைப் பனை அளவாகக் கருதிப் போற்றுவார்கள். பனை அளவு உதவி செய்தாலும், நன்றி உணர்வு இல்லாதவர்கள், அதை ஓர் உதவியாகவே நினைக்க மாட்டார்கள். 
 -நாலடியார், கீழ்மை -4

மனிதன்  சுகபோக வாழ்க்கையில் மூழ்கியிருக்கிறான்; நிலையற்ற வாழ்க்கையை நிலையானதாக எண்ணி மரணமடைந்து மண்ணோடு மண்ணாகிறானே, என்ன மதியீனம்!
-பட்டினத்தார்

நமது வாழ்க்கை முறைக்கு ஏற்ற வகையில் ஒரு குறிக்கோளை நாம் அமைத்துக்கொண்டு வாழ்ந்து சிறக்க வேண்டும்.
-பெரிய புராணம்

உலகில் பெரியது, சிறியது எல்லாமே இறைவன்தான்; வேறுபாடெல்லாம் ஆற்றலின் வெளிப்பாட்டில்தான் இருக்கிறது.
-சுவாமி விவேகானந்தர்

ஒழுக்கநெறியுடன் கூடிய வாழ்க்கை வாழ்பவர்களுக்கே புனிதமான இறையுலகம் வாய்க்கிறது. சூதும், பொய்யும் வஞ்சனையும் நிறைந்தவர்களுக்கு அந்த உலகம் கிடைக்காது.
-பிரச்ன உபநிஷதம் 1.16

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.