எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

பொன்மொழிகள்!

சுப்பிரமணிய ஸ்தோத்திரம் ஆறு எழுத்து மந்திரமாகும். அதை எவன் எப்போதும் படிக்கிறானோ, அவன் விரும்புவதற்கும் அதிகமாக அவனது எண்ணங்கள் நிறைவேறுகின்றன.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:14 pm

சுவாமி கமலாத்மானந்தர்

"சுப்பிரமணிய ஸ்தோத்திரம் ஆறு எழுத்து மந்திரமாகும். அதை எவன் எப்போதும் படிக்கிறானோ, அவன் விரும்புவதற்கும் அதிகமாக அவனது எண்ணங்கள் நிறைவேறுகின்றன.
 -குமாரதந்திரம் (ஸ்ரீ சுப்ரமண்ய மூல மந்திரஸ்தவம்)

"கல்வியை விரும்புபவன் கல்வியையும், செல்வத்தை விரும்புபவன் செல்வத்தையும், மகப்பேறு விரும்புபவன் மகப்பேற்றையும், முக்தியை நாடுபவன் முக்தியையும் அடைவார்கள்.
 -ஸ்ரீ நாரத புராணம் (சங்கஷ்டநாசன கணேச ஸ்தோத்திரம்)

"பிரம்மம்தான் ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், நிலம் என்ற பஞ்ச பூதங்களாக இருக்கிறது. -பிரச்ன உபநிஷதம்

"சிறிய பொருளையும் இகழாதே, சிறிய பொருளையும் அவமதிக்காதே. உன் வலக் கையில் செயல்திறமை இருக்கிறது; உன் இடக் கையில் வெற்றி இருக்கிறது. -அதர்வ வேதம்

"ஸ்ரீ ராமர் சொன்னது: நீ உன்னை சம்சாரத்திலிருந்து விடுவித்துக்கொள்ளும் விருப்பமுடையவன். ஆதலால் நீ என்னுடைய உண்மையான சொரூபத்தை நன்கு அறிவதற்காக, உடனே வேதாந்தங்களைக் கற்பதில் ஈடுபட வேண்டும். -ஸ்ரீ ராம கீதை

"மனதை அடக்கி உள்ளத்தை ஒருமுகப்படுத்துவது, வேதம் ஓதுவதற்கும் வேள்வி செய்வதற்கும் சமமானது. -வேதாந்த தீபம்

"ஜீவராசிகள் அனைத்தையும் பாதுகாப்பதும், தீயசக்திகளை நாசம் செய்வதும் கருணை எனப்படும்.  -மகான் துக்காராம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.