திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

பொன்மொழிகள்!

உபகாரம் மட்டுமே நட்புக்கு அறிகுறியல்ல; அபராதமும் விரோதத்தின் லட்சணம் அல்ல. "எதற்கும் நல்லெண்ணமா, கெட்ட எண்ணமா?' என்ற மனநிலை ஒன்றுதான்  உண்மையில் சரியான காரணமாகும்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:38 pm

சுவாமி கமலாத்மானந்தர்

உபகாரம் மட்டுமே நட்புக்கு அறிகுறியல்ல; அபராதமும் விரோதத்தின் லட்சணம் அல்ல. "எதற்கும் நல்லெண்ணமா, கெட்ட எண்ணமா?' என்ற மனநிலை ஒன்றுதான்  உண்மையில் சரியான காரணமாகும்.

- பஞ்சதந்திரம்

நீண்ட காலம் இடைவிடாமல் ஆன்மிக சாதனைகளைப் பயிற்சி செய்ய வேண்டும். அவ்விதம் செய்யப்பட்டால் அது உறுதியாகி விரும்பிய பலனைத் தரும்.

- யோக சூத்திரம்

அம்மா தேவி! ஆழங் காண முடியாததாக சம்சாரச் சேற்றுக்குழி இருக்கிறது! மனை மக்களான பாரம் வேறு என்னை அழுத்துகிறது! இதிலிருந்து விடுபடுவதற்கு  இயலாத வகையில், மோகமும் பற்றுமாகிய கயிறுகள் என் உடல் முழுவதையும் நெடுங்காலமாகப் பிணைத்திருக்கின்றன. இந்த நிலையில் என்னைக் கடைத்தேற்றுவதற்கு, நீ ஒருத்தியே ஆற்றல் பெற்றவள்.  

- ஸ்ரீ சங்கரர் (தேவீ புஜங்கம்



சம்போ! தங்களுக்கு உணவு விஷம், பாம்புதான் ஆபரணம், உடையோ புலித் தோல், வாகனமோ பெரிய காளைமாடு; எனக்கு என்ன கொடுக்கப் போகிறீர்கள்? எனக்கு வேண்டியது தங்களிடம் என்ன இருக்கிறது? ஒன்றும் வேண்டாம். தங்கள் தாமரை போன்ற பாதங்களில் எனக்கு பக்தி மட்டும் கொடுங்கள்.

- சிவானந்த லஹரீ, 87

கர்மத்தாலோ, மக்களைப் பெறுவதாலோ, செல்வத்தாலோ அல்ல; தியாகத்தினால்தான் சிலர் மரணம் இல்லாத பெருவாழ்வை அடைந்திருக்கிறார்கள். 

பரப்பிரம்மம் சொர்க்கத்திற்கும் மேலானதாகவும், (அறிஞர்களின் புத்தியாகிய) குகையில் வைக்கப்பட்டுப் பிரகாசிப்பதாகவும் விளங்குகிறது. அந்தப் பரப்பிரம்மத்தை ஞான வாழ்க்கையில் முயற்சி செய்பவர்கள் அடைகிறார்கள்.

- மஹாநாராயண உபநிஷதம் 12.3.4  

அனைவருக்கும் அழிவற்ற சுகத்தை உண்டாக்கவல்ல சிவபெருமானே! உங்களுடைய குளிர்ந்த கருணைபார்வை என்ற அமிருதத்தைப் பொழிந்து, எனது தாபத்தை அகற்றிவிடுங்கள். நான் தங்களின் கருணையையே எப்போதும் நினைத்துக்கொண்டிருப்பேன்.

- ஆர்திஹர ஸ்தோத்ரம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.