பொன்மொழிகள்!
என்னைப் போன்று சரணடைந்த அறிவில்லாதவர்களின் தளைகளை நீக்குபவரும், தளைகள் இல்லாதவரும், எல்லையற்ற கருணையுள்ளவரும், ஓய்வு இல்லாமல் செயல் புரிபவரும் ஆகிய பகவானுக்கு நமஸ்காரம்.


என்னைப் போன்று சரணடைந்த அறிவில்லாதவர்களின் தளைகளை நீக்குபவரும், தளைகள் இல்லாதவரும், எல்லையற்ற கருணையுள்ளவரும், ஓய்வு இல்லாமல் செயல் புரிபவரும் ஆகிய பகவானுக்கு நமஸ்காரம்.
தன்னுடைய அம்சத்தால் உடல் எடுத்தவர்கள் எல்லோருடைய மனங்களிலும் பகவான் இருக்கிறார். அந்தப் பெரியவராகிய பகவானுக்கு நமஸ்காரம்.
-ஸ்ரீமத் பாகவதத்தில் கஜேந்திரன்
சுவையான உணவு படைப்பதற்கு அன்புள்ள தாய் இருக்க வேண்டும்; ஒழுக்கமுள்ள நடத்தைக்கு நல்ல நண்பர்கள் இருக்க வேண்டும்; நல்ல அறிவு வளரவும், ஆற்றல் பெருகவும், சிறந்த ஆசான் இருக்க வேண்டும். தூய்மையான சிந்தனை பிறப்பதற்கு, இறைவன் மீது பக்தி இருக்க வேண்டும்.
-உபநிஷதம்
பல நிறங்களையுடைய பசுக்களின் பால் ஒரே வெண்மையுடையதாக இருக்கிறது. அது போலவே ஞானிகள் பலவகைப்பட்ட சரீரங்களில் உள்ள ஜீவன்களை ஒரே அறிவுமயமானவர்களாகக் காண்கிறார்கள்.
-பிரம்மபிந்து உபநிஷதம்
ஆத்மசுத்தியாகிய தொழிலைச் செய்யுங்கள். அதில் எப்போதும் விழிப்போடு இருங்கள்; அதே சிந்தனையுடன் இருங்கள்; முக்தி பெறுவதிலேயே கருத்துச் செலுத்துங்கள்.
-மகா பரிநிர்வாண சூக்தம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...