எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

பொன்மொழிகள்!

என்னைப் போன்று சரணடைந்த அறிவில்லாதவர்களின் தளைகளை நீக்குபவரும், தளைகள் இல்லாதவரும், எல்லையற்ற கருணையுள்ளவரும், ஓய்வு இல்லாமல் செயல் புரிபவரும் ஆகிய பகவானுக்கு நமஸ்காரம். 

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:09 pm

சுவாமி கமலாத்மானந்தர்

என்னைப் போன்று சரணடைந்த அறிவில்லாதவர்களின் தளைகளை நீக்குபவரும், தளைகள் இல்லாதவரும், எல்லையற்ற கருணையுள்ளவரும், ஓய்வு இல்லாமல் செயல் புரிபவரும் ஆகிய பகவானுக்கு நமஸ்காரம். 

தன்னுடைய அம்சத்தால் உடல் எடுத்தவர்கள் எல்லோருடைய மனங்களிலும் பகவான் இருக்கிறார். அந்தப் பெரியவராகிய பகவானுக்கு நமஸ்காரம். 

 -ஸ்ரீமத் பாகவதத்தில் கஜேந்திரன்

சுவையான உணவு படைப்பதற்கு அன்புள்ள தாய் இருக்க வேண்டும்;   ஒழுக்கமுள்ள நடத்தைக்கு நல்ல நண்பர்கள் இருக்க வேண்டும்; நல்ல அறிவு வளரவும், ஆற்றல் பெருகவும், சிறந்த ஆசான் இருக்க வேண்டும். தூய்மையான சிந்தனை பிறப்பதற்கு, இறைவன் மீது பக்தி இருக்க வேண்டும்.

-உபநிஷதம்

பல நிறங்களையுடைய பசுக்களின் பால் ஒரே வெண்மையுடையதாக இருக்கிறது. அது போலவே ஞானிகள் பலவகைப்பட்ட சரீரங்களில் உள்ள ஜீவன்களை ஒரே அறிவுமயமானவர்களாகக் காண்கிறார்கள்.

-பிரம்மபிந்து உபநிஷதம்

ஆத்மசுத்தியாகிய தொழிலைச் செய்யுங்கள். அதில் எப்போதும் விழிப்போடு இருங்கள்; அதே சிந்தனையுடன் இருங்கள்; முக்தி பெறுவதிலேயே கருத்துச் செலுத்துங்கள்.  

-மகா பரிநிர்வாண சூக்தம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.