திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

பொன்மொழிகள்!

எல்லாப் பொருள்களிலும் உயர்ந்த வித்யைதான் (கல்விதான்) மேலான பொருளாகும். ஏனென்றால் அதை யாராலும் எடுத்துக்கொள்ள முடியாது. அது தூய்மையானது; எப்போதும் குறையாதது.     

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:21 pm

சுவாமி கமலாத்மானந்தர்

எல்லாப் பொருள்களிலும் உயர்ந்த வித்யைதான் (கல்விதான்) மேலான பொருளாகும். ஏனென்றால் அதை யாராலும் எடுத்துக்கொள்ள முடியாது. அது தூய்மையானது; எப்போதும் குறையாதது.
- இதோபதேசம்

பசிக்கொடுமையால் அவதிப்படும்போது தாய் மகனைக் கைவிடுவாள், பெண் பாம்பு தன் முட்டைகளையே சாப்பிடும்; பசித்தவன் எப்படிப்பட்ட பாவம் செய்யவும் தயங்கமாட்டான். அதேபோல் வீழ்ச்சியடைந்தவர்களும் கருணையற்றவர்களாகிறார்கள்.
- மகாபாரதம்

அனைவருக்கும் ஆதாரமாகவும், ஆத்மாவாகவும் பரமாத்மா விளங்குகிறார். அவர் வேதங்களிலும் வேதாந்தங்களிலும் "விஷ்ணு' என்ற பெயரால் போற்றப்படுகிறார்.
- விஷ்ணு புராணம்

இறைவா! தாங்கள் எல்லையற்றவர். நாங்கள் எல்லைகளுக்கு உட்பட்டவர்கள். ஆதலால் எல்லைகள் கொண்ட சொற்களால் தங்களைப் போற்றுகிறோம். "தாங்கள் உள்ளபடியே எவ்வளவு மகத்தானவர்' என்பது எங்களுக்கு எப்படித் தெரியும்?
- குருநானக்

சொல்லும் அதன் அர்த்தமும் ஒன்றாக சேர்ந்திருக்கிறது. அதுபோல் ஒன்றியிருக்கும் உலக மாதா பிதாவான பார்வதிதேவியையும் பரமசிவனையும் நான் வணங்குகிறேன்.
- மகாகவி காளிதாசன், ரகுவம்சம் 11

"அதிதி' என்ற தேவியாக இருப்பவளும், "திதி' என்ற தேவியாக விளங்குபவளும், ஒளிபொருந்தியவளும், வளமளிக்கும் பூமியாக இருப்பவளும், செல்வத்தைத் தாங்குகிறவளும், விரும்பியவற்றை அளிப்பவளும், பாற்கடலில் உதித்தவளுமாகிய மகாலட்சுமியை நான் வணங்குகிறேன்.
- லட்சுமி அஷ்டோத்தரசதநாம ஸ்தோத்திரம்

முதியவர்கள், அரசர்கள், பாரம் சுமப்பவர்கள், வேதம் போன்ற சாஸ்திரங்களைப் படிப்பவர்கள், சந்நியாசிகள், பெண்கள், நோயாளிகள், குயவர்கள் ஆகியவர்களுக்கு வழிவிட வேண்டும்.

இவர்கள் எல்லோரையும்விட அரசரே முக்கியமானவர். சந்நியாசியோ அரசராலும் போற்றப்படுபவராவார்.
- யாக்ஞவல்க்ய ஸ்மிருதி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.