எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

பொன்மொழிகள்!

மனம் அமைதியாக இருப்பதற்குக்குச் சமமான உறவு இல்லை, சத்தியத்தைவிட உயர்ந்த தவம் இல்லை. முக்தியைவிட மிகப் பெரிய இலாபம் இல்லை. கங்கைக்குச் சமமான வேறு ஒரு நதியே கிடையாது.      

News image
Updated On :30 ஜனவரி 2024, 5:14 pm

சுவாமி கமலாத்மானந்தர்


* மனம் அமைதியாக இருப்பதற்குக்குச் சமமான உறவு இல்லை, சத்தியத்தைவிட உயர்ந்த தவம் இல்லை. முக்தியைவிட மிகப் பெரிய இலாபம் இல்லை. கங்கைக்குச் சமமான வேறு ஒரு நதியே கிடையாது.      

- சனக மகாமுனிவர்

* எவன் சுயநலத்தைத் தியாகம் செய்கிறானோ, எவனுக்குப் பொறாமையும் கர்வமும் இல்லையோ, எவன் அன்பாகவும் பணிவாகவும் இனிமையாகவும் பேசுகிறானோ, எவனுக்கு இந்த உலக சுகபோகங்களில் ஆசை இல்லையோ, அவனே ஸ்ரீ ராமபிரானின் உண்மையான ஊழியன்.

- சமர்த்த ராமதாஸ்


* கங்கைக்குச் சமமான தீர்த்தம் இல்லை, பெற்ற தாய்க்குச் சமமான குரு இல்லை. பகவான் விஷ்ணுவிற்குச் சமமான கடவுள் இல்லை. அதேபோல் குருவைவிடச் சிறந்த தத்துவம் கிடையாது.

- சனக மகாமுனிவர்



* கலியுகத்தில் எவனாவது ஒருவன் அற்பமான தர்மத்திற்கு முயற்சி செய்தாலும்கூட, அவன் கிருதயுகத்தில் பெரும் தவம் செய்து எத்தகைய புண்ணியத்தை அடைவானோ அவ்வளவு புண்ணியத்தை எளிதில் அடைவான்.

- பராசர முனிவர்


* உபகாரம் செய்யாதவர்களுக்கும் உதவியே செய்வது, பிரியமாக இருப்பது, செய்நன்றி மறக்காமல் இருப்பது, விழுந்தவர்களைத் தூக்கி விடுவது ஆகியவையே நற்குலத்தில் பிறந்தவர்களுக்கு அடையாளங்கள்.

- பஞ்சதந்திரம்


* மூடனை பிறர் அழிக்க வேண்டியதில்லை. அவன் தன்னைத் தானே அழித்துக்கொள்கிறான்.

-  புத்தர்


* திரேதாயுகத்தில் யாகங்களைச் செய்வதால் அடையும் பயனையும், துவாபரயுகத்தில் எம்பெருமானை அர்ச்சிப்பதால் கிடைக்கும் பயனையும், கலியுகத்தில் கேசவனுடைய திருநாம சங்கீர்த்தனம் ஒன்றைச் செய்தே பெறலாம்.

 - வேதவியாசர்


* தன்னை யாராவது பூஜித்தால் அதற்காக சந்தோஷப்படுவதில்லை. அவமதித்தாலும் தாபம் அடைவதில்லை. கங்கையின் மடுவைப்போல் எவன் கலக்கமடையாமல் இருக்கிறானோ, அவனே அறிவாளி என்று சொல்லப்படுவான்.

 - விதுர நீதி


* ஹே சூரிய பகவானே! நாங்கள் செய்யும் பாவங்களை மன்னித்து எங்களைப் பாவமற்றவர்களாகச் செய்வாய். நாங்கள் உன்னை எப்போதும் வழிபட்டுக்கொண்டிருக்கிறோம்.

- ரிக் வேதம்


* ஹே சூரிய பகவானே! ஒளிக்கெல்லாம் ஒளி தருபவனே, உலகங்களில் வியாபித்திருப்பவனே! எனக்கு சிறப்பையும் பொருளையும் அருள்வாய். என் பாவங்களைப் போக்கி எனக்கு மங்களங்களை அருள்வாய்.

- மகாகவி பவபூதி எழுதிய "மாலதீ மாதவம்'

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.