எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

பொன்மொழிகள்!

நீ சாப்பிடும் எந்த உணவையும் முதலில் இறைவனுக்குச் சமர்ப்பணம் செய்.  இறைவனுக்குச்  சமர்ப்பிக்கப்படாத உணவை ஒருவன் சாப்பிடக்  கூடாது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:22 pm

சுவாமி கமலாத்மானந்தர்

*  நீ சாப்பிடும் எந்த உணவையும் முதலில் இறைவனுக்குச் சமர்ப்பணம் செய்.  இறைவனுக்குச்  சமர்ப்பிக்கப்படாத உணவை ஒருவன் சாப்பிடக்  கூடாது.

*  இறைவன் திருவடிகளில் மனிதன் முழுமையாகச்  சரணடையும்போது, இறைவன் அவனுக்கு எல்லாவற்றையும் அருள்கிறார்.  

*  இறைவனிடம்  சரணடைந்தவன்தான்  காப்பாற்றப்படுவான்.

*  இறைவன் எல்லோருக்கும் சொந்தமானவன். இறைவனிடம் தீவிரமாகப் பிரார்த்தனை செய்பவனுக்கு அவரது தரிசனம் கிடைக்கும். 

*  தினந்தோறும் சிறிது ஆன்மிக சாதனை செய்தாலும், அது மனதிலிருந்து வீணான  நினைவுகளை  நீக்கிவிடும்.

*  மனதை  எப்போதும்  இளமையாகவும், உற்சாகமாகவும் வைத்திருக்க   வேண்டும்.

*  தூயமனம் கொண்டவர்கள் எல்லாவற்றையும் தூய்மையானதாகவே காண்கிறார்கள். 

*    உலக வாழ்க்கையில் பற்று குறையக் குறைய, அந்த அளவுக்கு ஒருவன் மனஅமைதி பெறுகிறான்.

*  அன்பில்லாத மனிதனை மனிதன் என்று சொல்லக் கூடாது. அவனை, "மிருகம்" என்றுதான் சொல்ல வேண்டும்.     

*  இடைவிடாமல் குருவிடம் பக்தி செலுத்துவதன் மூலிலம் சீடன் முக்தியடைகிறான். - அன்னை ஸ்ரீ சாரதாதேவியார்

*  பசியினால் துன்புற்றுக் கன்னத்தில் கைகளை வைத்துக்கொண்டு,  கண்களில் நீர் கலங்க வருந்தும் ஏழை மக்களுக்கு ஆகாரம் கொடுத்து அவர்களின் வருத்தத்தை மாற்றுவதே ஜீவகாருண்யமாகும். - வடலூர் வள்ளலார் 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.