பொன்மொழிகள்!
உன் ஆணவம், செருக்கு அனைத்தையும் தூர எறிந்துவிடு. அவன் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நட.


உன் ஆணவம், செருக்கு அனைத்தையும் தூர எறிந்துவிடு. அவன் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நட. இதுதான் நான் உனக்குச் சொல்லும் கடைசி வழி. இதைத் தவிர உன் நன்மைக்கு உரிய வேறு வழி ஒன்றும் எனக்குத் தெரியவில்லை.
எல்லாவற்றையும் ஆக்குபவனும், எல்லோரையும் தாங்குபவனும், எல்லாவற்றையும் ஆள்பவனும், எல்லாவற்றையும் அழிப்பவனும், ஞானம் முதலிய குணங்களுக்குக் கடல் போன்றவனும், அடியும், நடுவும், முடிவும் இல்லாதவனுமாகிய உங்கள் தெய்விக வடிவத்தை நீங்கள் உபதேசித்தபடியே என் கண் எதிரில் பார்க்கிறேன்.
- ஸ்ரீ ராமானுஜர்
பயப்படுத்துபவனும், பயத்தைப் போக்குபவனும் அவனே. - விஷ்ணு சகஸ்ரநாமம் இருதயக் குகையில் உள்ள அவனே பிரம்மா, அவனே சிவன், அவனே ஹரி, அவனே இந்திரன், அவனே அக்ஷர புருஷன், அவனே பரமேசுவரன்.
- நாராயண சூக்தம்
உலகில் நாம் அனுபவிக்கும் சுகமெல்லாம் பரமானந்தத்தின் ஒரு திவலை. அதன் ஒளியால் உலகம் விளங்குகிறது. அந்தப் பொருளைக் கண்டவருக்கு மற்றதெல்லாம் அதனுள்ளே தோன்றும்.
காரணமாகிய மண்ணைப் பற்றி அறிந்தால் காரியமாகிற மண்குடம், மண்பானை முதலியவை அறியப்படுவதுபோல, பிரம்மத்தை அறிந்தால் உலகம் அறியப்பட்டதாகிறது.
- ஆதிசங்கரர்
எள்ளில் எண்ணெய் போன்றும், சக்கிமுக்கிக் கல்லில் நெருப்புப் போன்றும் அனைவரின் உள்ளத்திலும் இறைவன் இருக்கிறார். நீங்கள் அறியாமையிலிருந்து விழித்தால் வாழ்வு பெறுவீர்கள்.
எல்லாவற்றிலும் ஒன்றையே (பரம்பொருளையே) பார்க்க வேண்டும். அதைத் தவிர இரண்டாவது உங்களை வழிதவறச் செய்யும்.
- கபீர்தாசர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...