ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

திருப்பணிக்கு காத்திருக்கும் சிவாலயங்கள்

வழிபாடு சிறப்பு மிக்க திருக்கழுக்குன்றம் தலத்திலிருந்து கல்பாக்கம் செல்லும் சாலையில் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள அனுபுரம் என்ற ஊரில் இறங்கி குடிபேரம்பாக்கம் ருத்ரேசுவரர் திருக்கோயிலை அடையலாம்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 1:26 pm

கி.ஸ்ரீதரன்

வழிபாடு சிறப்பு மிக்க திருக்கழுக்குன்றம் தலத்திலிருந்து கல்பாக்கம் செல்லும் சாலையில் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள அனுபுரம் என்ற ஊரில் இறங்கி குடிபேரம்பாக்கம் ருத்ரேசுவரர் திருக்கோயிலை அடையலாம். இவ்வூரின் வடகிழக்கு மூலையில் இரண்டு சிவாலயங்கள் அமைந்துள்ளன.

ருத்ரேசுவரர் கோயிலில் காலப்போக்கில் சரியாக வழிபாடு நடைபெறவில்லை. இதனால் கோயில் இடிந்து, சிவலிங்கம் புதைந்த நிலையில் பல ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது.

தற்போது இப்பகுதி மக்கள் கோயிலுக்கு திருப்பணி செய்ய விரும்பி சிறப்பான முறையில் புதுப்பித்துக் கட்டியுள்ளனர். கருவறை, அர்த்த மண்டபம், முன் மண்டபம் என்ற அமைப்புடன் கோயில் விளங்குகிறது. கருவறையில் இறைவன் ருத்ரேசுவரர் அழகிய சிவலிங்க வடிவில் காட்சி தருகிறார். வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. அம்மன் சந்நிதி தெற்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளது.

நந்தி மண்டபம், பரிவார ஆலயங்கள் ஆகியவற்றில் திருப்பணி முடியவில்லை. திருக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் இன்னும் செய்யப்படவில்லை. அதற்கான முயற்சிகள் ஊர் மக்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோயிலின் முன்பு உள்ள திருக்குளத்தை தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. கோயிலைச் சுற்றி பூஞ்செடிகள், வில்வமரம் போன்றவை வளர்க்கப்படுகின்றன.

இவ்வூர் குடிபேரம்பாக்கம் என அழைக்கப்படுகிறது. கோயிலை "குடி' என்று தெலுங்கில் அழைப்பது வழக்கம். தமிழில் "தளி' எனக் குறிப்பிடுவர். திருக்கோயில்கள் நிறைந்த இவ்வூர் முன்பு தளிபெரும்பாக்கம் என்று அழைக்கப்பட்டதை இவ்வூருக்கு அருகில் உள்ள வீராபுரம் சிவன் கோயில் கல்வெட்டினால் அறிய முடிகிறது.

இக்கோயிலுக்கு கிழக்கே அருகில் மற்றொரு சிவன் கோயிலும் உள்ளது. ஆனால் இக்கோயில் மிகவும் இடிந்த நிலையில் காணப்படுகிறது. வழிபாட்டில் இருந்த சிவலிங்கத்தை முன் மண்டபத்தில் வைத்துள்ளனர். அம்பாள் சிற்ப வடிவம் உடைந்துபோன நிலையில் பாதம் மட்டுமே உள்ளது.

இக்கோயிலில் வழிபாட்டில் இருந்த விநாயகர், பைரவர், அன்னபூரணி வடிவங்களை தற்பொழுது கிராம தேவதை கோயிலில் வைத்து வழிபடுகின்றனர். இக்கோயிலின் நுழைவு வாயிலில் தெலுங்கு கல்வெட்டும், அருகில் அப்பர் பெருமானின் புடைப்புச் சிற்பமும் காணப்படுகிறது. மேலும் முன் மண்டபத்தில் காணப்படும் கல்வெட்டுகளினால் இக்கோயிலின் இறைவன் பெயர் ஆட்கொண்ட நாயனார் என்பதை அறிய முடிகிறது. மிகவும் இடிந்த நிலையில் காணப்படும் இக்கோயில், கால வெள்ளத்தினால் கரைந்து விடாமல் இருக்க திருப்பணி செய்ய வேண்டிக் காத்திருக்கிறது.

தகவலுக்கு: 97903 49138

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.