துன்பமே மீதூரக் கண்டும், துறவுள்ளார்
இன்பமே காமுறுவர், ஏழையார்;-இன்பம்
இசைதோறும், மற்றதன் இன்னாமை நோக்கிப்
பசைதல் பரியாதாம், மேல்.
(பாடல் 60 அதிகாரம்: துறவு)
துன்பங்களே நாளும் நாளும் வந்து கொண்டிருப்பதைக் கண்டும், இல்வாழ்வினைத் துறந்துவிடுதலைப் பற்றி நினையாதவராக, அந்த இல்வாழ்விற் கிடைக்கும் சிற்றின்ப சுகத்தையே அறிவற்றவர்கள் பெரிதும் விரும்புவார்கள். மேலானவரோ, இன்பம் வந்து வாய்க்கும் பொழுதெல்லாம், அதனால் பின்வரும் துன்பத்தையே நினைந்து, இன்பத்தின்பால் ஆசை கொள்வதை ஒருபோதும் மேற்கொள்ள மாட்டார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









