வேங்கடம் முதல் குமரி வரை, வேங்கடத்துக்கு அப்பால் என்ற தலைப்புகளில், கல்கியில் 56 கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டு, அவை இன்று நூல் வடிவமும் பெற்று விட்டன. இவை தவிர பிள்ளைவாள், தமிழறிஞர் முதலியார், ரசிகமணி டிகேசி என்ற நூல்களும், கலைஞன் கண்ட கடவுள், கல்லும் சொல்லாதோ கவி, அமர காதலர், தென்றல் தந்த கவிதை, இந்தியக் கலைச் செல்வம், தமிழர் கோயில்களும் பண்பாடும் என்னும் கலைக்கட்டுரைத் தொகுப்புகளும், மதுரை மீனாட்சி, ஆறுமுகமான பொருள், பிள்ளையார்பட்டிப் பிள்ளையார், கம்பன் சுயசரிதம், கம்பன் கண்ட இராமன், அன்றும் இன்றும், பட்டி மண்டபப் பேருரைகள் உள்ளிட்ட நூல்களும் குறிப்பிடத்தக்கவை. காரைக்குடிக் கம்பன் கழகத்திலும் பிற இடங்களிலும் இவர் ஆற்றிய அற்புத உரைகளில் ஒருசில ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.