தலைவனொருவன் தலைவியை மணம் செய்ய விரும்பி பொருள் தேடச் சென்றிருந்தான். தலைவனின் பிரிவைத் தாங்கிக் கொள்ள முடியாத தலைவியால் எவ்வாறு ஆற்றியிருக்க முடிகிறது எனக் கேட்க வேண்டும் என நினைத்தாள் தோழி. தலைவனின் பிரிவு தலைவிக்குத் துயர் என்பதை உணர்ந்து தலைவியிடம் பிரிவு குறித்த மனநிலையை அறியப் பேசுகிறாள்.
அப்போது, தலைவி பின்வருமாறு பதிலளிக்கிறாள்.
எழுதரு மதியம் கடங்கண் டாஅங்கு
ஒழுகுவெள் அருவி ஓங்குமலை நாடன்
ஞாயிறு அனையன் தோழி
நெருஞ்சி அனையஎன் பெரும்பணைத் தோளே
(குறுந். 315)
வானத்திலே தோன்றி எழுகின்ற முழுநிலவானது கடலில் பிரதிபலிப்பது போல் ஒழுகும் வெண்மையான அருவியினையுடைய உயர்ந்த மலைகளைக் கொண்ட நாட்டை உடையவனாகிய தலைவன், ஞாயிறாகிய கதிரவனைப் போன்றவன்; என்னுடைய பெரிய மூங்கில்களைப் போன்ற தோள்கள் நெருஞ்சிப்பூவைப் போன்றவை எனத் தெரிவிக்கிறாள் தலைவி.
இப்பாடலில் தலைவனை ஞாயிறு எனக் கூறும் தலைவி, தன்னை நெருஞ்சிப்பூ எனக் கூறுவதற்குக் காரணம் உண்டு. நெருஞ்சிப் பூவானது ஞாயிறானது கீழ்த்திசைத் தோன்றும்போது கீழ்த்திசை நோக்கும். உச்சி வேளையில் உச்சியை நோக்கி நிற்கும், ஞாயிறு மேற்குத் திசையில் சாயும்போது நெருஞ்சிப்பூவும் அதே திசையைப் பார்க்கும் எனத் தெளிவுபடுத்துகிறாள் தலைவி.
தலைவனை எதிர்நோக்கியே தலைவி காத்திருக்கிறாள் என்பதையும் அவர்களிருவருக்குமான உள்ளப் பிணைப்பையும் தலைவனின் மனம் போல் தான் நடப்பேன் என்பதையும் தோழி அறியச் சொல்கிறாள் தலைவி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
உலோச்சனார் காட்டும் 'அழுங்கல் ஊரும் அறனில் அன்னையும்'

காதலில் நிகழ்ந்த அழகிய கற்பிதம்!
கணவா் பிணையில் வருவதற்கு போலி ஆவணம் சமா்ப்பித்த பெண், தோழி கைது

குறிஞ்சிக்கலியில் தலைமகனின் ஆளுமைப் பண்புகள்!
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK


