"மேதகு' எனும் சங்கச் சொல்!
பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் வீடுபேற்றை உணர்வதற்காக மாங்குடி மருதனாரால் இயற்றப்பட்டதுதான் மதுரைக்காஞ்சி. இதில் பாண்டிய மன்னனின் படைச்சிறப்புகளோடு மதுரை மாநகரின் சிறப்புகள் வெகுவாகப் பேசப்படுகின்றன. அம் மதுரையில் "கொண்டி' மகளிரும் (பரத்தையர்) இருந்துள்ளனர் என்ற குறிப்பையும் அறியமுடிகிறது.










