15 Dec, 2025 Monday, 07:40 PM
The New Indian Express Group
ஞாயிறு கொண்டாட்டம்
Text

வாரணாசியில் தமிழர்கள் குடியேறியது எப்படி?

PremiumPremium

வாரணாசியில் 1860-களில் தமிழர்களின் குடியேற்றம் ஏற்பட்டது. அங்கு எட்டையபுரம் புரோகிதர்கள் சென்றதால், தமிழர்கள் மொழி பிரச்னை ஏதுமின்றி புண்ணியக் காரியங்களைச் சிறப்பாகச் செய்தனர்.

Rocket

வெற்றிகரமாக ஏவப்பட்டது சந்திரயான் 3...

Published On29 Nov 2025 , 6:31 PM
Updated On29 Nov 2025 , 6:31 PM

Listen to this article

-0:00

By தினமணி செய்திச் சேவை

Vishwanathan

வாரணாசியில் 1860-களில் தமிழர்களின் குடியேற்றம் ஏற்பட்டது. அங்கு எட்டையபுரம் புரோகிதர்கள் சென்றதால், தமிழர்கள் மொழி பிரச்னை ஏதுமின்றி புண்ணியக் காரியங்களைச் சிறப்பாகச் செய்தனர்.

அந்தச் சேவை இன்றும் தடையின்றி நடைபெறுகிறது. 5 குடும்பத்தாருடன் தொடங்கப்பட்ட சமய, சமூகச் சேவையில் முன்னின்ற எட்டையபுரம் மன்னர், காரைக்குடி நாட்டுக்கோட்டை நகரத்தார் ஆகியோரின் சேவைகள் இன்றும் போற்றப்படுகின்றன.

வியாபார ரீதியாத எண்ணிலடங்காமல் செல்வங்களைத் தேடியபோதும் மூதாதையர்கள், பெற்றோருக்குச் செய்யக் கூடிய புண்ணியக் காரியங்களைத் தவறாமல் காரைக்குடியில் வசிக்கும் நாட்டுக்கோட்டை நகரத்தார் செய்து வருகின்றனர்.

இரு நூற்றாண்டுகளுக்கு முன்பே வாரணாசிக்குச் செல்லும்போது, தங்கும் இடம் உள்ளிட்ட வசதிகளுக்காக நகரத்தார் ஒன்றுகூடி ஆலோசித்து அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர். 1863-இல் வாரணாசியில் தங்கும் இடத்தை அமைத்தனர். அன்று நகரத்தார் ஊன்றிய விதை ஆலவிருட்சமாகி வளர்ந்து நிழல் தரும் காசி நகரத்தார் சங்கமாக உருவெடுத்தது.

சமய காரியங்கள் நடக்கும் நிலையில் பல சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. வாரணாசிக்குச் செல்லும் தமிழர்கள் தங்கள் முன்னோர்களுக்கு புண்ணியக் காரியம் செய்ய அவர்களது ரத்த உறவுகளின் பெயர்களையும், விவரங்களையும் ஹிந்தி மொழியில் பண்டிட்டுகளிடம் கூற முடியாமல் தவித்தனர்.

1866-ஆம் ஆண்டில் மறைந்த எட்டையபுரம் மன்னரின் புண்ணிய காரியம் செய்ய வாரணாசிக்குச் சென்ற எட்டையபுரத்தைச் சேர்ந்த தீட்சிதர் சிரமப்பட்டார். அவர் ஊர் திரும்பியதும் மன்னரைச் சந்தித்து, தமிழர்கள் வாரணாசியில் படும் சிரமங்களை எடுத்துரைத்தார்.

இதுகுறித்து மன்னர் ஆலோசித்தார். பின்னர், 1867-இல் எட்டையபுரத்தில் உள்ள நூற்றுக்கும் அதிகமான புரோகிதர்களை அழைத்து ஆலோசித்தார். அவர்களில் ஹிந்தி மொழியில் தேர்ச்சி பெற்ற ஐந்து பேரை உடனடியாகப் புறப்பட்டு, வாரணாசிக்குச் செல்ல உத்தரவிட்டார்.

வாரணாசிக்குச் சென்றவர்களில் பாரதியாரின் மாமாவும் இருந்தார். 1898-இல் பாரதியாரும் வாரணாசிக்குச் சென்று, தனது மாமாவின் வீட்டில் தங்கினார். வாரணாசி அலகாபாத் பல்கலைக்கழகத்தில் சேர முயற்சித்து, நுழைவுத் தேர்வில் முதல் மாணவனாகத் தேர்ச்சி அடைந்தார். பின்னர், அவர் சம்ஸ்கிருதம், ஹிந்தி மொழிகளைப் படித்தார்.

1901-இல் தில்லிக்கு விஜயம் செய்த எட்டயபுரம் மகாராஜா திரும்பும் வழியில், வாரணாசிக்குப் பயணமானார். அவர் திரும்பும் வழியில் தான் அனுப்பி வைத்த எட்டையபுரம் புரோகிதர்களைச் சந்தித்து, நலம் விசாரித்தார். அவர் அங்கிருந்த பாரதியாரை தன்னுடன் அழைத்து வந்தார்.

உ.காஜா மைதீன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
வீடியோக்கள்

தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025

தினமணி வீடியோ செய்தி...

15 டிச., 2025
தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
வீடியோக்கள்

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25

தினமணி வீடியோ செய்தி...

15 டிச., 2025
துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
வீடியோக்கள்

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies

தினமணி வீடியோ செய்தி...

14 டிச., 2025
Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
வீடியோக்கள்

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
வீடியோக்கள்

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
வீடியோக்கள்

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023