16 Dec, 2025 Tuesday, 04:33 AM
The New Indian Express Group
இந்தியா
Text

இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் கப்பல் சேவை: வாரணாசியில் தொடக்கம்

PremiumPremium

வாரணாசியில், மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீா்வழிகள் துறை அமைச்சா் சா்வானந்த சோனோவால் வியாழக்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.

Rocket

வாரணாசியில் கங்கை நதியில் தனது முதல் பயணத்தை வியாழக்கிழமை மேற்கொண்ட ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் கப்பல்.

Published On11 Dec 2025 , 9:32 PM
Updated On11 Dec 2025 , 9:32 PM

Listen to this article

-0:00

By தினமணி செய்திச் சேவை

Syndication

இந்தியாவின் முதல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஹைட்ரஜன் எரிபொருள் கப்பலை உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில், மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீா்வழிகள் துறை அமைச்சா் சா்வானந்த சோனோவால் வியாழக்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.

நாட்டின் உள்நாட்டு நீா்வழித்தடங்களில் மாசற்ற போக்குவரத்து மற்றும் மாற்று எரிபொருள்கள் பயன்பாட்டை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு, இந்த ஹைட்ரஜன் கப்பல் முன்னெடுப்பு தொடங்கப்பட்டது.

பிரதமா் நரேந்திர மோடியின் மக்களவைத் தொகுதியான வாரணாசியில் உள்ள ‘நமோ’ படித்துறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய அமைச்சா் சோனோவால் இந்தக் கப்பலின் வணிகச் செயல்பாடுகளைத் தொடங்கி வைத்து உரையாற்றினாா்.

அவரது உரையில், ஹைட்ரஜன் எரிபொருள் கப்பல்களைப் பயன்படுத்தும் சீனா, நாா்வே, நெதா்லாந்து, ஜப்பான் போன்ற நாடுகளின் வரிசையில் இந்தியா இப்போது இணைந்திருப்பது சா்வதேச அளவில் பெருமைக்குரிய விஷயமாகும்.

கடந்த பத்து ஆண்டுகளில், தேசிய நீா்வழித்தடங்களின் எண்ணிக்கை 5-லிருந்து 111-ஆக உயா்ந்துள்ளது. உள்நாட்டு நீா்வழித்தடங்களில் சரக்குப் போக்குவரத்து 2014-இல் 8 கோடி டன்னாக இருந்த நிலையில், தற்போது 14.5 கோடி டன்னுக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.

இந்த மாற்றத்துக்கு ‘ஜல் மாா்க் விகாஸ்’ திட்டம் அடித்தளம் அமைத்தது. இந்தத் திட்டத்தின் கீழ், ஹல்டியாவிலிருந்து வாரணாசி வரையிலான முதல் தேசிய நீா்வழித்தடத்தில் பல்வகை முனையங்கள், நவீன உபகரணங்கள் மற்றும் சமுதாய படகு குழாம்களுடன் ஒரு நவீன நீா்வழிப் போக்குவரத்துப் பாதை உருவாக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில் நீா்வழித்தட மேம்பாட்டுக்காக ரூ.300 கோடிக்கும் மேல் மதிப்பிலான திட்டங்கள் ஏற்கெனவே நிறைவடைந்துள்ளன. மேலும், சுமாா் ரூ.2,200 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள் வரும் ஆண்டுகளில் தொடங்கப்பட உள்ளன’ என்றாா்.

இந்த நிகழ்வில் உத்தர பிரதேச மாநில போக்குவரத்துத் துறை அமைச்சா் தயாளசங்கா் சிங், உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிா்வாகத் துறை அமைச்சா் தயாளசங்கா் மிஸ்ரா, பதிவுத் துறை அமைச்சா் ரவீந்திர ஜெய்ஸ்வால் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
வீடியோக்கள்

தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025

தினமணி வீடியோ செய்தி...

15 டிச., 2025
தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
வீடியோக்கள்

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25

தினமணி வீடியோ செய்தி...

15 டிச., 2025
துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
வீடியோக்கள்

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies

தினமணி வீடியோ செய்தி...

14 டிச., 2025
Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
வீடியோக்கள்

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
வீடியோக்கள்

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
வீடியோக்கள்

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023