உலகிலேயே மிகப் பெரிய குடும்பம் மிசோரமில் இருக்கிறது. வீட்டுத் தலைவர் ஜியோனா சனா. இவருக்கு 39 மனைவிகளும், 94 வாரிசுளும் உள்ளனர். இவர்களோடு வாரிசுகளின் பிள்ளைகளும் சேர்த்து மொத்தம் 181 பேரும் சண்டை- சச்சரவு இல்லாமல், ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர் என்பதுதான் ஆச்சரியம்.
மிஜோரமில் உள்ள பக்தாவாங் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜியோனா சனா. இவர் தனது 17-ஆவது வயதில் முதல் திருமணம் செய்துகொண்டார். பலகால இடைவெளிகளில் ஜியோனா பல மனைவிகளைத் திருமணம் கொண்டார். அதிகபட்சமாக ஒரே ஆண்டில் 10 பெண்களை ஜியோனா திருமணம் செய்திருக்கிறார்.
அந்த வீட்டில் ஒரே சமையல் அறை. பெரிய டைனிங் ஹாலில்தான் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிடுவார்கள். ஒருநேர உணவுக்கு சுமார் 80 கிலோ அரிசியும், 60 கிலோ உருளைக் கிழங்கும் தேவைப்படுகின்றன.
""மனைவிகள், குழந்தைகள் இடையே எந்தப் பாகுபாட்டையும் நான் காட்டுவதில்லை. அனைவரிடமிருந்து ஒரே மாதிரியான அன்பும் பாசமும் கிடைக்கின்றன. அதிகப் பெண்களைத் திருமணம் செய்து கொள்வது பற்றி எந்த மனைவியும் என்னிடம் கோபம் கொள்ளவில்லை. எல்லா மனைவிகளுக்கும் பிள்ளைகளுக்கும் நியாயமான முறையில் வாழ்க்கையை அமைத்து தந்துள்ளேன்'' என்று கூறியிருந்தார் ஜியோனா சனா.
நான்கு மாடிகளைக் கொண்ட வீட்டில் நூறு படுக்கை அறைகள் உள்ளன. ஜியோனாவின் வீடு அடுக்குமாடிக் கட்டடம் என்பதால் அங்கு பல குடும்பங்கள் வசிக்கின்றன என்றும் பலர் நினைக்கின்றனர். ஆனால், ஒரே குடும்பம்தான்.
மூன்று ஆண்டுகளுக்கு முன், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் காரணமாக, ஜியோனா இறந்தார். அப்போது அவருக்கு வயது எழுபத்து ஆறு. ஒரே கட்டடத்தில் வாழ்ந்து வந்தாலும் குடும்பங்களுக்குள் போட்டி, பொறாமை இல்லாமல் வாழ்ந்து கொண்டிருப்பது மிகப் பெரிய ஆச்சரியம்.
இந்த ஆச்சரியக் குடும்பத்தை, அவர்கள் வசிக்கும் வீட்டைப் பார்க்க சுற்றுலாப் பயணிகள் தவறாமல் வந்து செல்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எங்களது வாக்குறுதிகள் நம்பகத்தன்மையுடையவை! ஆர்.பி. உதயகுமார் சிறப்பு நேர்காணல்

சஞ்சு சாம்சன் இல்லாதது ராஜஸ்தான் ராயல்ஸுக்கு மிகப் பெரிய இழப்பு: டு பிளெஸ்ஸி

ஈரான் மீண்டும் கத்தாரை தாக்கினால், உலகின் மிகப் பெரிய எரிவாயு வயல் தகர்க்கப்படும்! - டிரம்ப் எச்சரிக்கை!

உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


