மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

நூதன ஓடுகள்..

இன்றைக்குப் பயன்பாட்டில் இருக்கும் மங்களுரு ஓடுகள் கோடை காலத்தில் சிறந்த காற்றோட்டத்தைத் தருகின்றன.

News image

மங்களுரு ஓடுகள்

Updated On :7 டிசம்பர் 2024, 6:30 pm

இன்றைக்குப் பயன்பாட்டில் இருக்கும் மங்களுரு ஓடுகள் கோடை காலத்தில் சிறந்த காற்றோட்டத்தைத் தருகின்றன. அதிக மழை பொழியும் இடங்கள், கடற்கரை நகரங்களில் இன்றும் பயன்படுத்தப்படுகின்றன.

1865-இல் மங்களுரில் ஓடும் குருபுரா, நேத்ராவதி ஆற்றங்கரையிலிருந்து களிமண் எடுக்கப்பட்டு, உரிய வடிவத்தை உருவாக்கிச் சுடப்பட்டது. முதலில் இரண்டு தொழிலாளர்களைக் கொண்டு இயங்கியது. இதை சற்று மாற்றி வடிவமைத்து, தற்போது பயன்பாட்டில் உள்ள மங்களூரு ஓடுகளை வில் ஹெல்ம் லுடோவிசி என்பவர் 1881-இல் கண்டுபிடித்தார். பின்னர், இவை இன்டர்லாக் டைல்ஸ்ஸை உருவாகின.

ஆங்கிலேயர் ஆட்சியின்போது, அரசு கட்டடங்களுக்கு இவை மட்டுமே பரிந்துரைக்கப்பட்டன.

சத்ரபதி சிவாஜி ரயில் நிலையமும் இந்த வகை ஓடுகளால் கட்டப்பட்டு, தற்போதும் சிறந்த முறையில் உள்ளது. இதனால் மங்களுரு பாணி ஓடுகள் பிரபலமாயின. நிறைய தொழிலகங்கள் வர ஆரம்பித்தன.

இந்த ஓடுகள் இலங்கை, தூர கிழக்கு நாடுகள், கிழக்கு ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு ஐரோப்பா, ஆஸ்திரேலியாவிலும் மங்களுரு ஓடுகள் பிரபலம் அடைந்து, ஏற்றுமதியும் அதிகரித்தது. அவற்றின் உயர் தரத்தால் கான்கிரீட்டை விட இதனை விரும்பினர்.

நீண்ட ஆயுளைத் தரும். 45 டிகிரி சாய்வாகப் பொருத்தப்படுவதால் மழைநீர் தங்காது. ஒழுகல் கிடையாது. களிமண்ணில் லேட்டரைட் உள்ளதால், இரும்புச் சத்து சேர்ந்து கற்களை சிவப்பு நிறமாக அழகூட்டுகின்றன. ஒரு ஓடு இரண்டு முதல் மூன்று கிலோ வரையில் எடை இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.