அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புவருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?எச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்!
/

நேரில் வந்த ஜப்பான் ரசிகை  

முதல் பாகத்தைப் போலவே  'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டாம் பாகமும் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றுள்ளது. 

News image
Updated On :13 மே 2023, 6:30 pm

முதல் பாகத்தைப் போலவே  'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டாம் பாகமும் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றுள்ளது. 
வெளிவந்த முதல் இரு நாள்களிலேயே சுமார் ரூ.100 கோடி வசூல் என லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  இந்தப் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்ப்பதற்காக தம்பதி சகிதமாக ஜப்பானிலிருந்து சென்னைக்கு வந்திருக்கிறார் நடிகர் கார்த்தியின் ரசிகை. 
பொதுவாக,  ரஜினிக்குதான் ஜப்பானில் அதிக ரசிகர்கள் என்று சொல்லப்படுவதுண்டு. அதைத் தாண்டி தற்போது கார்த்திக்கு ஜப்பானில் ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கிறது. 
ஜப்பானிலிருந்து வருகை புரிந்த தெருமி ககுபரி ஃபுயுஜிடாவை நடிகர் கார்த்தி தனது வீட்டுக்கு வரவைத்து அவருக்கு உணவு பரிமாறி உரையாடி மகிழ்ந்துள்ளார். 
இந்தச் சந்திப்பு குறித்து ரசிகை தெருமி ககுபரி ஃபுயுஜிடா கூறுகையில்,  
"நான் வேலை நிமித்தமாக சில காலம் இந்தியாவில் தங்கியிருந்தேன். அப்போது தமிழ் படங்களைப் பார்ப்பேன். அது முதல் நான் கார்த்தியின் தீவிர ரசிகை. 'பொன்னியின் செல்வன்' முதல் பாகம் புரிந்து கொள்ள கடினமாக இருந்தது. அதில் கார்த்தி நடிப்பு மிகவும் பிடித்திருந்தது. 'பொன்னியின் செல்வன்' இரண்டாம் பாகம் ஜப்பானில் வெளியாக காலமாகும் என்பதால் உடனே பார்த்தாக வேண்டும் என்று அங்கிருந்து கிளம்பி வந்தோம். மிக அட்டகாசமான படம்'' என்றார்.
 நடிகர் கார்த்தி கூறுகையில் "மிக சந்தோஷமான அனுபவம்.  அவருடன் பல விஷயங்கள் உரையாடினேன். அவரின் சினிமா பார்வை ஆச்சரியம் தந்தது.  அடுத்து நான் நடித்து வருகிற படத்தின் பெயர் ஜப்பான் என்றதும் இன்னும் சந்தோஷப்பட்டார்'' என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.