2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

வில்லன் ஆன குழந்தை நட்சத்திரம்

ராசு மதுரவன் இயக்கிய "முத்துக்கு முத்தாக' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் பைசல். அந்த படத்தில் அவர் நட்டி நட்ராஜின் சிறு வயது தோற்றத்தில் நடித்திருந்தார்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 7:15 pm

தினமணி

ராசு மதுரவன் இயக்கிய "முத்துக்கு முத்தாக' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் பைசல். அந்த படத்தில் அவர் நட்டி நட்ராஜின் சிறு வயது தோற்றத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு "செங்காடு', "மூடுபனி', "அன்புடன் அழகன்', "சமனன்' உள்ளிட்ட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தை சேர்ந்த பைசல், பட்டப்படிப்பை முடித்து விட்டு மும்பை சினிமா ஆர்ட் அகாடமியிலும், சென்னை கூத்துப்பட்டறையிலும் நடிப்பு பயிற்சி முடித்தார். அதோடு நடனம் மற்றும் சண்டை பயிற்களையும் முறையாக எடுத்துக் கொண்டு சமீபத்தில் வெளியான "பாயும் ஒளி நீ எனக்கு' படத்தில் வில்லனாக அறிமுகமாகி உள்ளார். இந்த படத்தில் ஹீரோ விக்ரம் பிரபுவின் தந்தையை கொன்று அவரோடு மோதும் கொடூர வில்லனாக நடித்துள்ளார். தற்போது "டாடி'  என்ற  படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். 

""சின்ன வயதில் இருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதுதான் எனது கனவாகவும், லட்சியமாகவும் இருந்தது. இதற்காக முறைப்படி நடிப்பு, நடனம், சண்டை பயிற்சிகளை பெற்றேன், கல்லூரி நாள்களில் "நாற்காலிகாரன்', "அப்பா செத்த நடுக்கூடம்' உள்ளிட்ட பல நாடகங்களில் நடித்து என்னை மெருகேற்றிக் கொண்டேன். குழந்தை நட்சத்திரமாக ஏராளமான படங்களில் நடித்து விட்டு தற்போது "பாயும் ஒளி நீ எனக்கு' படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமாகி உள்ளேன். தொடர்ந்து வில்லன் வாய்ப்புகள் வருகிறது. எல்லா விதமான கேரக்டர்களிலும் நடித்து "இயக்குநரின் நடிகன்' என்று பெயரை பெற விரும்புகிறேன். சினிமாக்களில் பாகுபாடு இல்லை. நல்ல சினிமாக்களில் இருக்க வேண்டும். அதுவும் அதை வெற்றிப் பெற வைக்க கூடிய முனைப்பில் உழைக்க வேண்டும்''  என்றார் பைசல். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.