தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

உலகின் புத்திசாலி!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த  நடாஷா  பெரியநாயகம்  உலகின் அதிபுத்திசாலி மாணவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

News image
Updated On :26 பிப்ரவரி 2023, 12:30 am

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நடாஷா பெரியநாயகம் உலகின் அதிபுத்திசாலி மாணவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது பதிமூன்று. அமெரிக்காவில் நியூ ஜெர்சியில் ஃபிலோரன்ஸ் பள்ளியில் ஆறாம் வகுப்பில் படிக்கிறார்.

உலகின் அதிபுத்திசாலியைத் தேர்ந்தெடுக்கும் போட்டியில் 76 நாடுகளிலிருந்து சுமார் 15,300 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இதில், நடாஷா உலக அதிபுத்திசாலி மாணவியாகத் தேர்ந்தெடுக்கப்படுவது இரண்டாவது முறையாகும். முதல்முறையாக 2021-இல் நடைபெற்ற போட்டியில் 84 நாடுகளிலிருந்து சுமார் 19 ,000 மாணவ மாணவிகள் பங்கேற்றபோதும், அவரே தேர்வு செய்யப்பட்டார்.

தனது வெற்றி நடாஷா கூறியதாவது:

""வீட்டில் என்னை பெற்றோரும் அக்காவும் உற்சாகப்படுத்தினர். புத்திசாலி மாணவியாக வந்துவிட வேண்டும் என்று அவர்கள் என் மேல் அழுத்தம் தரவில்லை.

என் போக்கில் செல்ல பெற்றோர் அனுமதித்ததே எனக்கு தரப்பட்ட மிகச் சிறந்த ஊக்கமும் உற்சாகமும் என்றே சொல்வேன். இந்தப் போட்டிக்காக பிரத்யேகமாக எந்தப் பயிற்சி வகுப்பிலும் சேரவில்லை. போட்டியின் கேள்விகளை எதிர்கொள்ள, பிரத்யேகமாக என்னைத் தயார் செய்வதில் அதிகமாகவும் கஷ்டப்படவில்லை. பள்ளிப் பாடங்களுடன் உபரியாக வாசித்தேன். முதல் முயற்சியில் தேர்வு செய்யப்பட்டதும் நான் மேற்கொண்ட முயற்சிகளும், பெற்ற அனுபவங்களும்தான்.

வாழ்க்கையில் எதையாவது சாதிக்க வேண்டும் எனில், வெற்றியோ, தோல்வியோ, முறையாக முயற்சி செய்ய வேண்டும். சாதாரணமாக முயற்சிக்கக் கூடாது. எதிர்காலத்தில் அறிவியல் அல்லது கட்டடக் கலையை படிக்க விருப்பம். கிடார், வயலின், பியானோ வாசிப்பேன். இசை கேட்பது எனக்குப் பிடிக்கும். ஓவியங்களும் வரைவேன்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.