/

விவசாயிகளுக்கே மாணவர்களின் லாபம்!

சந்தை குறித்து இளம்தலைமுறையினருக்குக் கற்றுத் தந்து பிறருக்குத் தருவதில் உள்ள மகிழ்ச்சியைப் புரிய வைப்பதற்கான முயற்சியை மேற்கொண்டது நாகப்பட்டினத்தில் உள்ள சர் ஐசக் நியூட்டன் கல்விக் குழுமங்கள்.

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 6:29 am

ஆர். வேல்முருகன்


சந்தை குறித்து இளம்தலைமுறையினருக்குக் கற்றுத் தந்து பிறருக்குத் தருவதில் உள்ள மகிழ்ச்சியைப் புரிய வைப்பதற்கான முயற்சியை மேற்கொண்டது நாகப்பட்டினத்தில் உள்ள சர் ஐசக் நியூட்டன் கல்விக் குழுமங்கள்.

2019-20-இல் நாகப்பட்டினத்தில் தொடக்கப்பட்ட இந்தக் கல்விக் குழுமப் பள்ளிகளில் சுமார் 1,000 மாணவர்கள் பயில்கின்றனர். இதில், எல்.கே.ஜி. முதல் 3-ஆம் வகுப்பு வரையுள்ள சுமார் 150 மாணவ, மாணவியரில் 75 பேரைத் தேர்வு செய்து பொங்கல் சந்தையை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்காக பள்ளி நிர்வாகத் தரப்பில் நிதியும் ஒதுக்கப்பட்டது. தேன் மிட்டாய், கடலைமிட்டாய் உள்ளிட்ட தின்பண்டங்கள், சில கார வகைகள், பானகம், மோர் உள்ளிட்ட பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டன.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் சந்தையைப் பார்வையிட்டு பணம் கொடுத்துப் பொருள்களை வாங்கினர்.

லாபத் தொகையை வைத்து பக்கத்து ஊர் விவசாயிகள் 25 பேருக்கு போர்வை, வேட்டி, துண்டைக் கொடுத்து இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கினர். இதன் மூலம் மாணவர்களுக்குக் கொடுத்து மகிழ்ச்சி. விவசாயிகளுக்கோ தங்களை மதித்து அழைத்து புத்தாடை பெற்ற மகிழ்ச்சி.

இது தொடர்பாக நாகப்பட்டினம் சர் ஐசக் நியூட்டன் கல்விக் குழுமங்களின் தலைவர் டி.ஆனந்த், இயக்குநர் டி.சங்கர் ஆகியோர் கூறியதாவது:

""சந்தையில் இருப்பதைப் போன்று கடைகள் வைத்து வியாபாரம் எப்படி இருக்கும் என்பதைக் கற்றுத் தந்தோம்.

லாபத் தொகையை வடவூரைச் சேர்ந்த விவசாயிகள் 25 பேருக்கு போர்வை, வேட்டி, துண்டு ஆகியவற்றை வழங்கினோம். உலகுக்கு உணவைத் தரும் விவசாயிகளின் உழைப்புக்கு மரியாதை தர வேண்டும் என்பதை குழந்தைகளுக்குப் புரிய வைத்துள்ளோம்'' என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.