டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

ஒருவருக்காக வங்கிக் கிளை!

இங்கிலாந்து  நாட்டில் ஒரே ஒரு வாடிக்கையாளருக்காகவே,  சில ஆண்டுகளாகச் சேவையை வங்கிக் கிளை  ஒன்று அளித்துவருகிறது.   84 வயதாகும்  பீட்டர் விஸ்பை என்பவர்தான் அந்த வாடிக்கையாளர். 

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 6:29 am

சக்ரவர்த்தி

இங்கிலாந்து  நாட்டில் ஒரே ஒரு வாடிக்கையாளருக்காகவே,  சில ஆண்டுகளாகச் சேவையை வங்கிக் கிளை  ஒன்று அளித்துவருகிறது.   84 வயதாகும்  பீட்டர் விஸ்பை என்பவர்தான் அந்த வாடிக்கையாளர். 

லண்டன் நகரின் பெர்மோன்ட்சே  பகுதியில் டவர் பிரிட்ஜ் சாலையில் செயல்படும்  பர்க்லே வங்கியின் கிளையில்   வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கு மாறிவிட்டதால்  யாருமே  வங்கிக்கு  வருவதில்லை.  உலகின் முதல் பத்து  பெரிய வங்கிகளில் இந்த வங்கியும் ஒன்று.  

டிஜிட்டல்  முறையை  அறியாத,  ஆண்டராய்ட் கைப்பேசியைப் பயன்படுத்திப் பழக்கம் இல்லாத பீட்டர் விஸ்பை மட்டுமே  பல தெருக்களைக் கடந்து வங்கியில் பணம் செலுத்த, எடுக்க  வந்து போய்க்  கொண்டிருந்தார்.  அவர் ஏடிஎம்  கூட பயன்படுத்துவதில்லை. இவருக்குச் சேவை வழங்கவே  வங்கிக் கிளை செயல்பட்டுவருகிறது.  

நிர்வாகச் செலவு  அதிகமாவதால், வங்கி நிர்வாகம் பீட்டர் விஸ்பையின்   வாரிசுகளிடம் பேச்சுவார்த்தை  நடத்தியது.

"பீட்டர் விஸ்பைக்கு   புதியதாக கைப்பேசி  வாங்கிக் கொடுத்து  டிஜிட்டல் முறையில்  பணம் போட எடுக்க, டெபிட் கார்டு  பயன்படுத்தச் சொல்லிக் கொடுங்கள்.  ஒரு வாடிக்கையாளருக்காக  ஒரு  கிளை அலுவலகத்தை செயல்படுத்த   வேண்டியுள்ளது. அதனால்  நிர்வாகச்   செலவு மிகவும் அதிகமாவதால்  இந்த  வங்கிக்  கிளையை  மூட  முடிவு எடுத்துள்ளோம். உங்கள் அனைவரது ஒத்துழைப்பு தேவை'  என்று புரிய வைத்தது.

இதற்கு பீட்டர் விஸ்பையின்  வாரிசுகள் ,  ""சரி. புதிய கைப்பேசியை வாங்கிக் கொடுத்து அதன் மூலம் இணைய வங்கி சேவையைப் பயன்படுத்த கற்றுக் கொடுக்கிறோம்.  நீங்கள்  வங்கிக் கிளையை  மூடிக் கொள்ளலாம்''  என்று உறுதியாகத் தெரிவித்தனர். இதன்பேரில்,   பர்க்லே வங்கி  தனது பெர்மோன்ட்சே பகுதி  கிளையை நிரந்தரமாக மூட  முடிவெடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.