இங்கிலாந்து நாட்டில் ஒரே ஒரு வாடிக்கையாளருக்காகவே, சில ஆண்டுகளாகச் சேவையை வங்கிக் கிளை ஒன்று அளித்துவருகிறது. 84 வயதாகும் பீட்டர் விஸ்பை என்பவர்தான் அந்த வாடிக்கையாளர்.
லண்டன் நகரின் பெர்மோன்ட்சே பகுதியில் டவர் பிரிட்ஜ் சாலையில் செயல்படும் பர்க்லே வங்கியின் கிளையில் வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கு மாறிவிட்டதால் யாருமே வங்கிக்கு வருவதில்லை. உலகின் முதல் பத்து பெரிய வங்கிகளில் இந்த வங்கியும் ஒன்று.
டிஜிட்டல் முறையை அறியாத, ஆண்டராய்ட் கைப்பேசியைப் பயன்படுத்திப் பழக்கம் இல்லாத பீட்டர் விஸ்பை மட்டுமே பல தெருக்களைக் கடந்து வங்கியில் பணம் செலுத்த, எடுக்க வந்து போய்க் கொண்டிருந்தார். அவர் ஏடிஎம் கூட பயன்படுத்துவதில்லை. இவருக்குச் சேவை வழங்கவே வங்கிக் கிளை செயல்பட்டுவருகிறது.
நிர்வாகச் செலவு அதிகமாவதால், வங்கி நிர்வாகம் பீட்டர் விஸ்பையின் வாரிசுகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியது.
"பீட்டர் விஸ்பைக்கு புதியதாக கைப்பேசி வாங்கிக் கொடுத்து டிஜிட்டல் முறையில் பணம் போட எடுக்க, டெபிட் கார்டு பயன்படுத்தச் சொல்லிக் கொடுங்கள். ஒரு வாடிக்கையாளருக்காக ஒரு கிளை அலுவலகத்தை செயல்படுத்த வேண்டியுள்ளது. அதனால் நிர்வாகச் செலவு மிகவும் அதிகமாவதால் இந்த வங்கிக் கிளையை மூட முடிவு எடுத்துள்ளோம். உங்கள் அனைவரது ஒத்துழைப்பு தேவை' என்று புரிய வைத்தது.
இதற்கு பீட்டர் விஸ்பையின் வாரிசுகள் , ""சரி. புதிய கைப்பேசியை வாங்கிக் கொடுத்து அதன் மூலம் இணைய வங்கி சேவையைப் பயன்படுத்த கற்றுக் கொடுக்கிறோம். நீங்கள் வங்கிக் கிளையை மூடிக் கொள்ளலாம்'' என்று உறுதியாகத் தெரிவித்தனர். இதன்பேரில், பர்க்லே வங்கி தனது பெர்மோன்ட்சே பகுதி கிளையை நிரந்தரமாக மூட முடிவெடுத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 78.77% வாக்குப்பதிவு- நேரலை

குடும்பத்துடன் வாக்களித்த நடிகை ரம்யா பாண்டியன்!
தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! மாவட்டவாரியாக விவரம்...

மேற்குவங்க பாஜக எம்எல்ஏ கார் மீது கற்கள் வீசித் தாக்குதல்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


