குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

விஜய்சேதுபதி வசனத்தில் விமல்

எம் .ஐ.கே. புரொடக்ஷன்ஸ் பிரைவேட்  லிமிடெட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் "குலசாமி'.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 6:51 pm

தினமணி

எம் .ஐ.கே. புரொடக்ஷன்ஸ் பிரைவேட்  லிமிடெட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் "குலசாமி'. கதாநாயகனாக விமல் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தான்யா ஹோப் நடிக்கிறார். போஸ் வெங்கட்,  முன்னாள் போலீஸ் அதிகாரி ஜாங்கிட் , வினோதினி, மகாநதி சங்கர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 

விஜய்சேதுபதி வசனம் எழுதியுள்ள இப்படத்தை சரவண சக்தி எழுதி இயக்கியுள்ளார். விஜய்சேதுபதி இதற்கு முன் ஆரஞ்சு மிட்டாய் படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.  படம் குறித்து இயக்குநர் பேசும் போது... ""ஒரு குற்றமும், அந்தக் குற்றத்ûச் செய்ய தூண்டக் கூடிய அம்சங்களும்தான் இதன் ஆதாரம். ஒரு குற்றத்தின் மூலம் எங்கே ஆரம்பிக்கிறது. அது அந்த மனிதனை எங்கே நிறுத்துகிறது. 

அதன் விளைவுகள் என்ன என்பதுதான் இதன் பேசு பொருள். அதை ஒரு கமர்ஷியல் சினிமாவுக்கான அம்சங்களுக்கு உட்பட்டு, செய்து முடித்திருக்கிறேன்.  அறிந்தும் அறியாமலும் அவ்வப்போது செய்கிற தவறுகள்தான் வாழ்க்கையின் திசைகளைத் தீர்மானிக்கும். அது நல்லதோ கெட்டதோ... சில நிமிடங்கள், சில விநாடிகளில் நாம் அதுவரைக்கும் வடிவமைத்து வைத்த மொத்த வாழ்க்கைப் போக்கும் மாறி விடும். அப்படித்தான் இங்கே ஒரு சூழல். தங்கைக்காக போராடும் ஒரு அண்ணன் என்கிற போக்கில் கதை போகும். 

தமிழ்நாட்டிலேயே நம்பர் ஒன் இடத்தைப் பிடித்த பெண்ணை ஒரு ஊரே சேர்ந்து படிக்க வைக்கிறது. படிக்கப் போன இடத்தில் அந்த பெண்ணுக்கு பிரச்னை. அந்த பிரச்னையை சரிவர கையாண்டு தங்கையை காப்பாறினாரா.... ஊரின் கனவை கரை சேர்த்தாரா என்பது பரபர திரைக்கதை.  அதை எப்படி அவரால் முடிக்க முடிந்தது என்பதுதான் கதையின் லைன். அதற்காக அவர் கடந்து வந்த தூரம், கொடுத்த  விலை என கதை போகும்.  எல்லா மனித சிக்கல்களிலும் காதல் எப்படி ஒரு பங்கு வகிக்கிறதோ, அப்படி இந்த கதை ஓட்டத்திலும், மையப் புள்ளியிலும் ஒரு காதல் உண்டு'' என்றார் இயக்குநர். தற்போது திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.