வீதிகளில், தெருக்களில், ரயில், பேருந்து நிலையங்களில் அலைந்து திரியும் பிச்சைக்காரர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், அனாதைகள், அனாதையாக்கப்பட்ட முதியோர்கள், மதுவால் வாழ்க்கை மாறிப்போனவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுகிறார் ஈரோட்டைச் சேர்ந்த 27 வயதான நவீன்குமார்.
""தொடக்கத்தில் பொறியியல் கல்லூரி ஒன்றில் உதவி பேராசிரியராகப் பணிபுரிந்து வந்தேன். இப்போது முழு நேரமும் சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறேன். வெங்கடராமன் என்பவர் மதுவுக்கு அடிமையானதால் குடும்பத்தைக் கவனிக்க முடியவில்லை. சொந்த பந்தங்களிலிருந்து விலகி வீதிக்கு வந்துவிட்டவர். கையில் பணமின்றி கோயில்களில் பிச்சை எடுக்க ஆரம்பித்தார். அழுக்கான கிழிந்த உடைகளுடன் கடைசியில் எச்சில் உணவுகளைத் தேடி உண்ணும் நிலைமைக்குத் தள்ளப்பட்டார்.
ஊரடங்கு காலத்தில் கடைகள், கோயில்கள் அடைக்கப்பட்டதால் உணவுக் கழிவுகள் கூட கிடைக்காத நிலையில் வீதி ஓரத்தில் சுருண்டு கிடந்தவரை எங்கள் காப்பகத்திற்குக் கொண்டுவந்து முடி வெட்டிவிட்டு, சவரம் செய்து... குளிப்பாட்டி நல்ல ஆடைகளை உடுத்தி மீட்டு எடுத்தோம். மதுவை மறக்கடிக்கும் நிலையத்தில் ஒப்படைத்து குடிப்பழக்கத்தை மறக்கச் செய்தோம். யோகா கற்றுக் கொடுத்தோம். தள்ளுவண்டியில் தேநீர், பலகாரங்களைச் செய்து விற்பதில் ஆர்வம் காட்டியதால் தள்ளுவண்டி, தேவையான பாத்திரங்கள் போன்றவற்றை ஏற்பாடு செய்து கொடுத்தோம். மனம் திருந்திய வெங்கடராமன் சம்பாதிக்கத் தொடங்கியதும் தனது சொந்தங்களை தன்னுடன் அழைத்துக் கொண்டு வாடகை வீட்டில் வாழ்ந்து வருகிறார். மனைவி, மகன், அம்மா ஆகியோர் பழையவற்றை மறந்து வெங்கட்ராமனிடம் பாசம் நேசத்துடன் வாழுகிறார்கள்.
தேநீர் பலகாரங்கள் விற்பதில் ஒருநாளைக்கு நானூறு ரூபாய் லாபம் கிடைத்து வந்தது. வெங்கட்ராமனுக்கு பெயிண்டிங் வேலையும் தெரியும் என்பதால் தேநீர் விற்பதை விட்டுவிட்டார். பெயிண்ட்டிங் வேலையில் ஒருநாளைக்கு 900 ரூபாய் ஊதியம் கிடைக்கிறதாம். மறுவாழ்வு கிடைத்தவர்களில் தேநீர் விற்க விரும்புபவர்களுக்குத் தள்ளுவண்டி, பாத்திரங்களை வழங்குவதற்காக எங்களிடம் மீண்டும் ஒப்படைத்துவிட்டார். அதுமட்டுமல்ல... பெயிண்ட்டிங் வேலைக்குப் போகாத நாள்களில் எங்கள் சேவைகளில் உதவுகிறார். வெங்கட்ராமனைப் போன்று இழந்த வாழ்க்கையை, இழந்த மதிப்பு மரியாதையை, எங்கள் அறக்கட்டளை மூலமாக பலர் மீட்டுக் கொண்டுள்ளனர். இந்தச் சாதனைகள்தான் எங்கள் அறக்கட்டளையை முன்னெடுத்துச் செல்கின்றன. தொடங்கி ஏழு ஆண்டுகள் ஆன நிலையில், இதுவரை பாதிக்கப்பட்ட 45 பேர் தங்கள் சொந்தக் காலில் நிற்கும் பெருமையைப் பெற்று சுய மரியாதையுடன் வாழ்ந்து வருகிறார்கள்.
எனது அம்மாவால் நடக்க முடியாது. அப்பா ஒரு மாற்றுத்திறனாளி. அவர்கள் தினம் தினம் அனுபவிக்கும் சிரமங்கள்தான் எனக்குப் பாடங்களாக அமைந்தன. வீதியில் அலைபவர்களின் அவலங்களைப் புரியவைத்தது. அவர்களுக்கு மறுவாழ்வு தரவேண்டும் என்று என்னை அறிவுறுத்தியது. படிக்கும் போது கையில் இருக்கும் பத்து ரூபாயையும் யாராவது பிச்சைக்காரர் கேட்டால் கொடுத்துவிட்டு நான் தண்ணீர் குடித்து சமாளித்துக் கொள்வேன். ஒத்த அலைவரிசையில் பல நண்பர்கள், தன்னார்வ இளைஞர்கள், இளம் பெண்கள் இந்த சேவைகளில் தோள் கொடுக்க முன்வந்தார்கள். அப்படித்தான் "அட்சயம்' அறக்கட்டளை உருவானது. வீதிகளில் குப்பை கூளங்களில் அமர்ந்து, பலரிடத்திலும் கை ஏந்தி அலைபவர்களுக்கு மறுவாழ்வு தரும் பாதையில் பயணிக்கிறோம்'' என்கிறார் நவீன் குமார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.40% வாக்குப்பதிவு- நேரலை

ஹோர்முஸ் நீரிணையில் சிறிய படகுகள்கூட தயக்கமின்றி சுட்டு வீழ்த்தப்படும்: அமெரிக்க கடற்படைக்கு டிரம்ப் உத்தரவு

"ஆடிப்பாடி அல்ல...! அறிவைப் பயன்படுத்தி வாக்களியுங்கள்!" இயக்குநர் மாரி செல்வராஜ்

தமிழ்நாட்டில் 84.51% வாக்குப்பதிவு! 6 மணி நிலவரம்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


