திருவல்லம் கோயிலின் தொன்மைக்குச் சான்றாக முப்பதுக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் காணப்படுகின்றன. பல்லவ மன்னர்கள்அவர்களது சமகாலத்தில்ஆட்சி செய்த கங்கமன்னன் பிரிதிவிபதி, பாண அரசர்கள் ஆகியோர் இக்கோயிலின் சிறப்பான வழிபாட்டிற்கு தானம் அளித்துள்ளனர். இத்தலம் கல்வெட்டுகளில் "தீக்காலிவல்லம்' எனப் பெயரிட்டு அழைக்கப்படுகிறது. மேலும் ராஜராஜசோழன், ராஜேந்திர சோழன், குலோத்துங்க சோழன், மூன்றாம் குலோத்துங்க சோழன், மூன்றாம் ராஜராஜன், வீரபாண்டியன், விஜயகண்ட கோபாலன் போன்ற மன்னர்கள் இக்கோயிலைப் போற்றியுள்ளனர் என்பதையும் கல்வெட்டுகளில் இருந்து அறியலாம்.