சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

கறுப்பான பெண்கள் சிவப்பழகு பெற!

காய்ச்சாத பாலில் முகத்தைத் துடைக்கவும். சிறிது வெள்ளரிச்சாறு, சிறிது ஸ்ட்ராபெர்ரி சாறு எடுத்து ப்ரிஜில் 5 நிமிடம் வைத்து பிறகு முகத்தில் மசாஜ் செய்யவும்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:04 am

தவநிதி

காய்ச்சாத பாலில் முகத்தைத் துடைக்கவும். சிறிது வெள்ளரிச்சாறு, சிறிது ஸ்ட்ராபெர்ரி சாறு எடுத்து ப்ரிஜில் 5 நிமிடம் வைத்து பிறகு முகத்தில் மசாஜ் செய்யவும். அதன் பிறகு மசித்த பப்பாளிப்பழம், இரண்டு துளி தேன், சிறிது பால் கலந்து முகத்திற்கு பேக் போட்டு வரவும்.

காய்ச்சாத பாலில் முகத்தைத் துடைத்துவிட்டு முட்டை கோஸ் சாறு கொண்டு முகத்தில் லேசாக மசாஜ் செய்யவும். பிறகு பஞ்சைக் கொண்டு துடைத்துவிட்டு. முட்டைகோஸ் விழுது, பால், தேன் கலந்து முகத்திற்கு பேக் போட்டு பதினைந்து நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இவை இரண்டு பேக்குகளும் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை செய்து கொள்ளலாம். முகப்பரு இல்லாதவர்கள் பத்து நாட்களுக்கு ஒருமுறை செய்து கொள்ளலாம்.

வாரத்திற்கு ஒருமுறை சிறிது தேன், சிறிது பாலேடு, சிறிது வெள்ளரிச் சாறு, கடலைமாவு நான்கையும் குழைத்து முகத்தில் தடவி பதினைந்து நிமிடத்திற்குப் பின் கழுவி வரலாம்.

மசித்த வாழைப்பழத்துடன், சிறிது தேன், சிறிது பயற்ற மாவு குழைத்து முகத்தில் தடவி ஊற வைத்து பதினைந்து நிமிடம் கழித்து கழுவி வரலாம். இப்படி செய்து வந்தால் நிச்சயம் நிறம் மாறுவதைக் காணலாம்.

நல்ல சூடான பாலில் குங்குமப்பூவைப் போட்டு சிறிது நேரம் மூடி வைத்துவிட வேண்டும். பால் மிதமான சூட்டிற்கு வந்த பிறகு பாலைக் குடிக்க வேண்டும். இப்படி செய்வதாலும் நிறம் கூடும்.

ஆயுர்வேதக் கடைகளில் குங்குமாதி என்ற தைலம் கிடைக்கும். இதனை வாங்கி கொஞ்சம் பாலுடன் கலந்து வாரம் ஒருமுறை முகத்துக்கு மசாஜ் செய்து வந்தால் நிச்சயம் நிறம் கூடும். மசாஜ் செய்த பிறகு அரைத்த சந்தனத்தில் பால்விட்டுக் குழைத்து முகத்தில் தடவி பதினைந்து நிமிடம் ஊற வைத்து கழுவிவிட வேண்டும். இது மிகவும் முக்கியம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.