இயந்திரமயமாகிவிட்ட வாழ்க்கை ஓட்டத்தில், இன்றைய இளம் தலைமுறை மாணவர்கள் ஐ-பேட் கேட்பதிலும், ஃபேஸ்புக், டிவிட்டரிலும் தான் நேரத்தைச் செலவழிக்கின்றனர். இன்றைய மாணவர்களிடையே பாடப் புத்தகம் தவிர்த்து, நூலகம் சென்று படிக்கும் பழக்கம் அருகிவருவது கண்கூடான உண்மை. நூலகத்திற்கும், மாணவர்களுக்கும் பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது. இதை மறுதலிக்கச் செய்யும் வகையில், கோவையில், தமிழ் ஆர்வம் கொண்ட மாணவர்கள் பலர் இதிகாசங்களையும், தமிழ் இலக்கியங்களையும் படித்து மேடை ஏறி தங்களது சொல்லாற்றலால் அனைவரையும் தங்கள் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்து வருகின்றனர்.