திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

வாழைப்பூ சங்கு!

வாழைப்பூ போன்ற தோற்றம் கொண்டது இந்த சங்கு. பழங்காலத்தில் நமது முன்னோர்கள் வணிகத்துக்கு இந்த சங்குகளைத்தான் அதிகம் பயன்படுத்தினார்களாம். அழகுப்பொருளாக பயன்படுத்தப்படும் இச்சங்கின் குணங்கள் குறித்து மன்

News image
Updated On :27 டிசம்பர் 2023, 4:11 pm

சி.வ.சு. ஜெகஜோதி

வாழைப்பூ போன்ற தோற்றம் கொண்டது இந்த சங்கு. பழங்காலத்தில் நமது முன்னோர்கள் வணிகத்துக்கு இந்த சங்குகளைத்தான் அதிகம் பயன்படுத்தினார்களாம்.

அழகுப்பொருளாக பயன்படுத்தப்படும் இச்சங்கின் குணங்கள் குறித்து மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அறக்கட்டளையின் திட்ட அலுவலர் அ.முருகன் கூறியதாவது..

""மீன்களை மட்டுமே சாப்பிடுவது ஒரு வகை,சிறு சங்குகள்,சிறு சிப்பிகளை சாப்பிடுவது மற்றொரு வகை. சிறு புழு, பூச்சிகளை உண்டு வாழ்வது மூன்றாவது வகை.

இம்மூன்று வகைகளில் மீன்களை மட்டும் சாப்பிடும் வகையான உயிரினத்திற்கு மட்டும் நீரோடாக்சின் என்ற ஒரு வகை விஷ வீரியம் இருக்கிறது.

இந்த உயிரினத்தில் உள்ள ரேடுலா என்ற உறுப்பு மனிதனின் நாக்கு போன்றே சுவையை உணரப் பயன்படுகிறது. ஊசி போலவே இருக்கும் இந்த ரேடுலா கண்களுக்குத் தெரியவில்லை என்றாலும் இதன் மூலம் தான் பிற உயிரினங்களின் மீது விஷத்தை செலுத்தி கொல்கிறது.

இவை மீனவர்களைக் கொட்டினால் இறந்து விடுவார்கள் என்பது அவர்களுக்கும் தெரியாமல்தான் உள்ளது. சுமார் 20 வருடங்கள் வரை உயிர்வாழும் இந்த ஜீவன்கள் கடலுக்கு அடியில் பவழப் பாறைகள் உள்ள பகுதிகளில்தான் அதிகமாக காணப்படுகின்றன.

வாழைப்பூ சங்கிலிருந்துதான் உடல் வலியை குணப்படுத்தும் பிரெய்ல்ட் என்னும் மாத்திரை தயாராகிறது. இதன் மருத்துவக் குணங்கள் குறித்து பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகம்,தேசிய உயிரியல் ஆராய்ச்சி மையம் ஆகியனவும் பல்வேறு ஆராய்ச்சிகளைச் செய்து வருகின்றன. ஒரு தடவை சுமார் 20ஆயிரம் முட்டைகளை இட்டாலும் இதன் எண்ணிக்கை என்னவோ வெகுவாக குறைந்து கொண்டேதான் போகிறது. இவ்வுயிரினத்தில் குளோரி ஆப் இந்தியா என்ற வகை உயிரினம் ஒன்றின் விலை மட்டுமே ரூ.30ஆயிரம் வரை விற்பனையாகிறது. சிறந்த அழகுப் பொருளாகவும் பயன்படுத்தப்படும் இந்த அரியவகை கடல்வாழ் உயிரினம் மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் தான் அதிகமாக உள்ளன.

பெண் சங்கின் அடிப்பகுதியில் மவுல்ட்டிங் என்ற சுரப்பி இருக்கும். ஆண் இனத்திற்கு அவை இருப்பதில்லை. ஆணுக்கும் பெண்ணுக்கும் வெளித்தோற்றத்தில் எவ்வித பேதமும் இல்லை என்றாலும் இச்சுரப்பியை வைத்துத்தான் அது எந்த இனம் என்று அறிந்து கொள்ள முடிகிறது.

இல்லையேல் இரண்டாக வெட்டினால்தான் எந்த இனம் எனத் தெரிய வரும். முதுகெலும்பில்லாத இந்த உயிரினம் முதுகெலும்பு உள்ள உயிரினங்களையே பெரும்பாலும் உணவாக்கி உயிர்வாழும் அபூர்வ ஜீவன்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.