கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள காடுகள்தான் படம் எடுத்தோம். இந்தக் காடுகளுக்குள் அட்டைப்பூச்சிகள் அதிகம். உடம்பு முழுவதும் உப்பைத் தேய்த்துக் கொண்டால் அட்டைப்பூச்சிகள் நம்மிடம் வராது. ஆனால் இந்த உப்பு வாசத்திற்கு யானைகள் நம்மை நோக்கி வரும். இதை அனுபவத்தில்தான் உணர்ந்தோம். கிரேன், காமிரா மற்றும் பல படப்பிடிப்பு சாதனங்களை டிரக்கில் எடுத்துச் சென்று அங்கிருந்து பரிசலில் கொண்டுபோய் படப்பிடிப்பு நடக்கும் இடங்களுக்குத் தூக்கிக்கொண்டு நடந்தோம். செல்போன்களும் இங்கு வேலை செய்யாது என்பதைவிட செல்போன்களுக்கான அலைவரிசைகளை அந்த நிறுவனங்களே அனுமதிக்கக் கூடாது என்ற சட்டமும் உள்ளன. அங்கு வாக்கி டாக்கிகள் மட்டுமே பயன்படுத்த முடியும். நாங்கள் ஏதோ எப்படியோ படப்பிடிப்பை நடத்திவிட்டோம். சமீபத்தில் ஆந்திர முதல்வர் ராஜசேகரரெட்டி இறந்தபோது அவரது உடலைத் தேடி எடுப்பதற்கு ஐந்தாயிரம் பேர் இரண்டு நாள் முழுவதும் ஈடுபட்டனர் என்பதிலிருந்தே புரிந்துகொள்ளுங்கள் நாங்கள் படப்பிடிப்பு நடத்த எவ்வளவு சிரமப்பட்டிருப்போம் என்று.