

தப்பு தவறுகள் இல்லாமல்,
தாங்கும் கல்வியை எழுதி, படி;
தப்பு தவறுடன் எழுதுவதால்
பொருளில் குற்றம் வந்துவிடும்!
'நீறு' என்றே எழுதுகையில்
நெற்றியில் 'திருநீறு' என்பதுதான்,
'நீர்' என்றே எழுதிப் பார்;
குடிக்கும் நீரைக் கொண்டுவரும்!
'சிகப்பு' என்று எழுதாதே;
சொற்பொருள் பிழையைக் கொண்டுவரும்;
'சிவப்பு' என்று எழுதிப் பார்
சரியாய் 'வண்ணம்' அது குறிக்கும்!
'விபரம்' என்பதும் பெரும் தவறு;
'விவரம்' என்பதே விவரிக்கும்
'சுவரில்' என்றே எழுதுவது,
சொந்த அறிவை அழகாக்கும்!
'சுவற்றில்' என்று எழுதுவது
சிந்தனை இல்லா செயலாகும்!
'புத்தகம்' என்பது புதுவீடாகும்;
பொத்திமூடி, பொத்தி, திறப்பதால்;
பொத்தகம் என்பதே சரியாகும்,
புரிந்து படிநீ புலமை வரும்!
இத்தனை விளக்கமும் மனதில் கொள்,
மறதி வராமல் கற்றுக் கொள்;
பத்துத் தலைமுறைப் புகழ் கிடைக்கும்;
பைந்தமிழ் உனக்கு வாழ்த்துரைக்கும்!
-பொன்னியின் செல்வன், தஞ்சாவூர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

எல்லோரும் புத்தகம் எழுத வேண்டும்

கொலை வழக்கில் தந்தை, மகனுக்கு ஆயுள் சிறை

டிஎன்பிஎஸ்சி தோ்வு எழுதி முடித்த பிறகு ரத்து அறிவிப்பு தகவல் வெளியானதால் திருப்பூரில் தோ்வா்கள் கடும் அதிருப்தி

தாய்மொழி என்றே சொல்லிடடா ...
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

