லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

அங்கிள் ஆன்டெனா

மேகம் சூரிய ஒளியைப் பிரதிபலிப்பதால் வெண்மையாக இருக்கிறது என்று சொன்னீர்கள். அப்படியானால் மழை வருவதற்கு முந்தைய மேகம் மட்டும் ஏன் கருமை நிறத்தில் இருக்கின்றது?

News image
Updated On :12 ஜூன் 2022, 12:30 am

மேகம் சூரிய ஒளியைப் பிரதிபலிப்பதால் வெண்மையாக இருக்கிறது என்று சொன்னீர்கள். அப்படியானால் மழை வருவதற்கு முந்தைய மேகம் மட்டும் ஏன் கருமை நிறத்தில் இருக்கின்றது?

மேகத்தில் உள்ள குட்டிகுட்டியான நீர்த்திவலைகள் சூரியனின் வெளிச்சக் கதிர்களைப் பிரதிபலிப்பதால் மேகம் வெண்மையாக இருக்கின்றது என்று சென்ற வாரம் படித்தோம். அப்படியானால் மழை மேகம் மட்டும் ஏன் கருப்பாக இருக்க வேண்டும்? முதலில் மழை மேகம் எப்படி உருவாகிறது என்று கவனியுங்கள். 

பூமியிலுள்ள நீர்த்துளிகள் ஆவியாகி மேலே சென்று மேகங்களாகின்றன. இந்த நீர்த்துளிகள்தான் வெண்ணிற சூரியக் கதிர்களை பிரதிபலித்து மேகத்துக்கு வெண்மை நிறம் தருகின்றன. இதே நீர்த்துளி ஆவி அதிகமாகச் சேர்ந்துகொண்டே போவதால் மேகத்தில் அடுக்கடுக்காக நீர்த்திவலைகள் சேர்ந்துகொண்டே போகின்றன. இப்படி சேரச் சேர அந்த மேகம் மிக உயரத்துக்குச் சென்றுவிடுகிறது. இந்த இரண்டு காரணங்களினால் மேக நீர்த்திவலைகள் சூரிய ஒளியைப் பிரதிபலித்தாலும் அந்த அடுக்குகளைத் தாண்டி அந்த ஒளி நம்மை அடைவது கடினமாகிவிடுகிறது.

மேலும், இந்தக் கார்மேகங்கள் மிக உயரத்திற்கும் சென்று விடுவதால் நமக்கு இந்த மழை மேகம் கருமையாகத்தான் தோன்றும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.