மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

அரங்கம்: காகத்திற்கு உணவு

மனிதர்கள் போடறதை சாப்பிட்டு நீயும் மனிதர்கள் போல பாரபட்சம் காட்ட ஆரம்பிச்சுட்டே.

News image
Updated On :26 பிப்ரவரி 2022, 3:35 pm

காட்சி -1
இடம்: மரக்கிளை
பாத்திரங்கள்: இரண்டு காகங்கள்
(மரத்தில் அமர்ந்திருந்த இரண்டு காகங்கள் பேசிக் கொண்டிருந்தன.)

காகம் 1: மனிதர்கள் போடறதை சாப்பிட்டு நீயும் மனிதர்கள் போல பாரபட்சம் காட்ட ஆரம்பிச்சுட்டே.
காகம் 2: நான் எப்ப பாரபட்சம் காட்டினேன்?
காகம் 1: சுமதி வீட்டு முற்றத்திலே தட்டிலே வைத்தது எது இருந்தாலும் போய் சாப்பிடறே. ஆனால், மாலதி தட்டிலே எதைப் போட்டு வைத்திருந்தாலும் சாப்பிடறதில்லை. இது பாரபட்சம் இல்லையா?
காகம் 2: நான் சொன்னால் உனக்குப் புரியாது. நாளையிலிருந்து நீ மாலதி வீட்டுத் தட்டுலே போட்டு இருக்கிறதை சாப்பிட்டுப் பார்.

காட்சி - 2
இடம்: மரக்கிளை
காலம்: மறுநாள்
பாத்திரங்கள்: இரண்டு காகங்கள்

காகம் 1: சாதம் நல்லா வெந்திருந்தது. பதார்த்தம் எதுவும் இல்லை.

காட்சி - 3
இடம்: மரக்கிளை, காலம் : இரண்டாவது நாள்
பாத்திரங்கள்: இரண்டு காகங்கள்

காகம் 1: ஐய்ய்ய.... சாதம் ரொம்ப பழைய சாதம். தண்ணீரோட இருந்தது. பொரியல் நிறைய வைத்திருந்தாங்க. சாதம் நல்லா இல்லையே! பொரியல் சாப்பிடலான்னு ஆசையா எடுத்தா ஒரே உப்பு. சாப்பிடவே முடியலை.

காட்சி - 4
இடம்: மரக்கிளை, காலம் : மூன்றாவது நாள்
பாத்திரங்கள்: இரண்டு காகங்கள்

காகம் 1: இன்றைக்கு தட்டிலே சாப்பிட ஒன்றுமே வைக்கலை. தட்டு சாப்பிட்ட தட்டு மாதிரியே இல்லை. நன்றாக துடைத்து வைத்த மாதிரி இருந்தது.
காகம் 2: இப்ப நீ மூன்று நாள் சுமதி வீட்டுத் தட்டில் போட்டு வைத்திருக்கிறதை சாப்பிட்டுப் பார்த்துச் சொல்லு.

காட்சி - 5
இடம்: மரக்கிளை
பாத்திரங்கள்: இரண்டு காகங்கள்

நேரம் : மூன்று நாள்களுக்குப் பிறகு காகம் 1: எல்லா நாளும் தட்டிலே சூடான சாதம் இருந்தது. கொஞ்சம் பொரியல், இல்லைனா சாம்பார் இருந்தது. சாப்பாடு நல்லா இருந்தது.

காகம் 2: இப்போ புரியுதா உனக்கு? மாலதி காக்கைக்கு சாப்பாடு போடணுங்கிற எண்ணத்திலே தட்டுலே சாப்பாட்டை வைக்கவில்லை. அவங்க சாப்பிட்டு மிஞ்சிப் போனதை தட்டுல அப்படியே வைக்கிறாங்க.

காகம் 1: அதனாலதான் சில நாளைக்கு சூடான சாப்பாடு, ஒரு சில நாள்களுக்குத் தண்ணீர்விட்ட பழைய சாதம்ன்னு இருக்கா?

காகம் 2: ஆமாம். பொரியலும் நம்ம சாப்பிடணுங்கிற எண்ணத்திலே வைக்கவில்லை. பொரியலில் உப்பு ரொம்ப அதிகம் ஆயிட்டதாலே, யாருமே சாப்பிட்டிருக்க மாட்டாங்க. அதனால எல்லாப் பொரியலையும் தட்டிலே வெச்சிட்டாங்க.

காகம் 2: சுமதி, மிஞ்சிப் போனதை காக்காய்க்குப் போட்டுடலாம்னு தட்டிலே சாப்பாடு வைக்கலை. நாம சாப்பிடறதை இன்னொரு ஜீவனுக்கும் கொடுக்கணுங்கிற தர்ம சிந்தனையில சாதம், பொரியல் அல்லது சாம்பார் காக்காய்க்குன்னு எடுத்து வைத்துவிட்டு அவங்க சாப்பிடறாங்க.

காகம் 1: இப்போ எனக்கு நல்லாப் புரியுது.

காகம் 2: சுமதி செய்யறது தருமம். அதனால அவங்க தட்டிலே போட்டு வைத்திருக்கிறதை சாப்பிட்டா, அவங்க செய்யற தருமத்தோட பலன் அவங்களுக்குப் போகும். அதனாலதான் அவங்க தட்டுல இருக்கிறதை சாப்பிடறேன்.

காகம் 1: நீ சொல்றது சரிதான். மாலதி குப்பைத் தொட்டியிலே போடறதுக்குப் பதிலாக தட்டிலே போட்டு வைக்கிறாங்க.  காக்காய்க்கு உணவு போடணும்கிற தர்ம சிந்தனையிலே செய்யலை.

-திரை-

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.