/

கர்மவீரர் வழி நடப்போம்!

 ஆட்சியில் இருந்த போதிலுமே - ஓர்  அகந்தை மனதில் அண்டாது,  காட்சி அளித்த தலைவர் அவர் - காம  ராஜர் என்பதை மறக்காதே!    மதிய உணவுத் திட்டத்தால்  மாணவர் படிக்கச் செய்தவரை  நதிகளில் அணைகள் அமைத்தவரை  நன்றி

News image
Updated On :2 ஜனவரி 2024, 6:06 pm

வ.மு. முரளி

 ஆட்சியில் இருந்த போதிலுமே - ஓர்

 அகந்தை மனதில் அண்டாது,

 காட்சி அளித்த தலைவர் அவர் - காம

 ராஜர் என்பதை மறக்காதே!

 மதிய உணவுத் திட்டத்தால்

 மாணவர் படிக்கச் செய்தவரை

 நதிகளில் அணைகள் அமைத்தவரை

 நன்றியுடன் நீ நினைத்திடணும்!

 பதவிகள் தேடி வருகையிலும் - மனம்

 பதறாது உழைத்த பேராளர்

 நிதமும் மக்கள் நலம் கருதி - தன்

 குடும்பம் மறந்த தவசீலர்!

 எளிமை வாழ்வு, உயர் உள்ளம் - சொல்

 என்றும் மாறாப் பெருந்தன்மை

 தெளிந்த பார்வை, செயலூக்கத்தால்

 தேசம் காத்த தலைவர் அவர்!

 நாட்டுக்காக வாழ்ந்தவரை - நாம்

 என்றும் மறக்கக் கூடாது!

 வீட்டுக்காகப் படித்திடணும் - பின்

 நாட்டை நாமும் காத்திடணும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.