நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

கடமை!

பேராசிரியர் ஒருவர் காந்திஜியைச் சந்திக்க ஆசிரமத்துக்கு வந்தார். அவர் அதற்கு முன்பு காந்திஜியை நேரில் பார்த்ததில்லை. ஆசிரமத்துக்குள் நுழைந்தவர், ஒரு பெரியவர் அறையைப் பெருக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தா

News image
Updated On :2 ஜனவரி 2024, 6:27 pm

இல.வள்ளிமயில்

பேராசிரியர் ஒருவர் காந்திஜியைச் சந்திக்க ஆசிரமத்துக்கு வந்தார். அவர் அதற்கு முன்பு காந்திஜியை நேரில் பார்த்ததில்லை.

ஆசிரமத்துக்குள் நுழைந்தவர், ஒரு பெரியவர் அறையைப் பெருக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தார்.

""நான் மகாத்மாஜியைக் காண வந்திருப்பதாக, அவரிடம் போய் சொல்...'' என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

""ஐயா. காந்தி நேரப்படி நடப்பவர். தாங்கள் சற்றே காத்திருங்கள். 11 மணிக்கு நிச்சயம் காந்தி உங்களைச் சந்திப்பார்'' என்றார் அந்தப் பெரியவர்.

பேராசிரியருக்குக் கோபம் வந்துவிட்டது. காந்திஜியை மகாத்மாஜி என்கிறேன். இந்த மனிதரோ காந்தி என்று மரியாதைக்குறைவாக அவரைக் குறிப்பிடுகிறாரே என்ற கோபம் அவருக்கு.

மணி சரியாகப் பதினொன்று ஆனதும், பெருக்கி முடித்த பெரியவர், பேராசிரியரைப் பார்த்து, ""நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்? நான்தான் காந்தி! உங்களுக்கு வேண்டியதைக் கேளுங்கள்...'' என்றார்.

பேராசிரியர் அதிர்ந்துபோய் விட்டார். காந்திஜியிடம் மன்னிப்புக் கோரினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.