தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

பெண்ணால் உயர்ந்தவர்!

இளைஞர் ஒருவரை அவரது காதலி மாற்றி யோசிக்கச் சொன்னதுடன் ஐடியா ஒன்றையும் அளித்துள்ளார்.

News image
Updated On :8 பிப்ரவரி 2025, 6:30 pm

இளைஞர் ஒருவரை அவரது காதலி மாற்றி யோசிக்கச் சொன்னதுடன் ஐடியா ஒன்றையும் அளித்துள்ளார். அதன்மூலம் இளைஞர் ஒரு வாரத்தில் நாற்பதாயிரம் ரூபாய் சம்பாதித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. உலகம் முழுவதில் இருந்து ஆன்மிகப் பெரியோர்கள், பக்தர்கள் என கோடிக்கணக்கானவர்கள் பங்கேற்று வருகின்றனர். இந்தக் கும்பமேளாவில் சில ஆயிரம் பேராவது காலையில் பல் துலக்க வேப்பங்குச்சியைப் பயன்படுத்துவார்கள்.

'

வேலையில்லாத நீங்கள் காலையில் சென்று வேப்பங்குச்சிகளை விற்றால் நல்ல வருமானம் கிடைக்கும்' என்று காதலி சொன்னதை மறுக்காமல் அக்கம்பக்கத்திலிருக்கும் வேப்ப மரங்களிலிருந்து பொருத்தமான குச்சிகளை சேகரித்தார் அந்த இளைஞர். இவ்வாறு வேப்பங்குச்சிகளை விற்று ஒரே வாரத்தில் அந்த இளைஞர் சம்பாதித்தது நாற்பதாயிரம் ரூபாய்.

மகா கும்பமேளாவில் பதினாறு வயது மோனாலிசா போஸ்லே பாசி மாலை விற்பனை செய்து சமூக ஊடகங்களில் வைரலானதைப் போலவே, இந்த இளைஞரும் வைரலாகியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.