டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

எம். அசோக்ராஜா

காட்டில் ராஜா சிங்கம், ஒரு ஆட்டை அழைத்து, 'என் வாய் நாறுகிறதா என்று பார்த்துச் சொல்'' என்றது.

ஆடு முகர்ந்துப் பார்த்துவிட்டு, 'ஆமாம்.. நாறுகிறது'' என்று சொல்லிவிட்டது. உடனே சிங்கம், 'முட்டாளே உனக்கு என்ன திமிர்'' என்று ஆடு மீது பாய்ந்து குதறியது.

அடுத்து சிங்கமானது ஒரு ஓநாயை அழைத்து, அதனிடம் கருத்தைக் கேட்டது. ஓநாய் முகர்ந்துப் பார்த்துவிட்டு, 'கொஞ்சம்கூட நாறவில்லை'' என்றது. இதற்கு சிங்கம், 'மூடனே பொய்யா சொல்கிறாய்?'' என்று கூறி அடித்துக் கொன்றது.

பின்னர் ஒரு நரியை அழைத்து, இதே கேள்வியை சிங்கம் கேட்டது. இதற்கு நரி, 'நாலு நாளா கடுமையான ஜலதோஷம். அதான் எனக்கு ஒரு வாசனையும் தெரியவில்லை'' என்றது. உடனே நரியை சிங்கம்விட்டுவிட்டது.

இதில் இருந்து என்ன தெரியுது குட்டீஸ். ஆபத்துக் காலத்தில் புத்திசாலிகள் வாயைத் திறக்க மாட்டார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.