நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

சமையல் குறிப்புகள்...

முட்டைக்கோஸை சமைக்கும்போது ஒரு துண்டு இஞ்சியையும் சேர்த்து சமைத்தால், அதன் மணம் மாறாமல் இருக்கும்.

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 3:13 pm

தினமணி

முட்டைக்கோஸை சமைக்கும்போது ஒரு துண்டு இஞ்சியையும் சேர்த்து சமைத்தால், அதன் மணம் மாறாமல் இருக்கும்.

கொத்துமல்லி இலைகளை நன்கு ஆய்ந்து சுத்தமாகத் தண்ணீரில் அலசி காய வைத்து, காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைத்தால், அதிக நாள்கள் கெட்டுப் போகாது.

தேங்காய்க்குப் பதிலாக, வேர்க்கடலை, முந்திரி போட்டு சட்னி செய்தால் சுவையாக இருக்கும்.

துவரம் பருப்பை வேக வைக்கும்போது, ஒரு தேக்கரண்டி வெந்தயத்தையும் சேர்த்தால் சாம்பார் இரவு வரை கெடாமல் இருக்கும்.

தக்காளிப் பழங்களை மிக்ஸியில் அரைத்து சாம்பாரில் கலந்தால், சாம்பார் சிவப்பாகவும் ருசியாகவும் இருக்கும்.

பொடியாக நறுக்கிய பாகற்காயோடு சீரகம், மிளகு, உப்பு கலந்து சூப் செய்யலாம்.

வெந்த உருளைக் கிழங்கின் மேல் பயத்தம் மாவை பூசி செய்யும் பொரியல் பிரமாதமாக இருக்கும்.

அப்பம் செய்யும்போது, அரிசி மாவுடன் சிறிதளவு வெண்ணெய் சேர்த்து செய்தால், அப்பம் மொறுமொறுவென்று நல்ல சுவையாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.